காதல் அழகானது (செந்தமிழ்ச் சாரல்)
- - - - - - - - - - - - - - -
தாயில்லாமல் வந்தவர் இல்லை,
காதலில் விழாதவர் எவரும் இல்லை
காதலித்தவன்(ள்) கவிஞனாகிறான்(ள்)
காட்சிப்படுத்த முடியாதது காதல்,
அதற்கு ஓர் எல்லையும் இல்லை,
காற்றை உணரத்தான் முடியும்,
காதலையும் உணரத்தான் முடியும்,
அன்பின் உச்சம் காதல்,
அழகால் வருவது காதலில்லை,
ஆனந்தமாய் வருவதே
அழகான காதல்
- - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment