Monday, 27 November 2017

பிரியாத வரம் வேண்டும்

பிரியாத வரம் வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - -
யார் என்று தெரியாது
பழகியதும் கிடையாது
பார்வையால் பேசியதும் இல்லை
பாவனைகள் காட்டியதும் இல்லை

நொடி பொழுதில் வந்தால்
தேநீரை கொடுக்கும் போது பார்த்தால்
அந்த நொடிகளில் கண்கள் பேசியது
மனதில் ஒளி வீசியது

மாப்பிள்ளையை பிடித்துள்ளதா?
உறவுகள் பெண்ணிடம் வினவ
ஆம் என்ற மெளன ஒலி பிறக்க
இரு குடும்பங்கள் ஒன்றாக
அவள் என் மனைவியாக
திருமண பந்தம் தாம்பத்யம் ஆக

கண்ணால் பேசி
கண்ணை கொண்டு குறிப்பறிந்து
வேண்டியதை செய்திடுவாள்,
இன்முகம் பூத்திடுவாள் என்னவள்
அவளை பிரியாத வரம் வேண்டும்
என் அன்னையே,
எனக்கு ஆசி வழங்கிட வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா

No comments:

Post a Comment