எனையாளும் என்னுயிரே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
எனையாளும் என்னுயிரே
என்னுள்ளே எப்படி நுழைந்தாய்
எந்தன் நெஞ்சில் ஏன் குடிக்கொண்டாய்
மனதை ஏனோ திருடிச் சென்றாய்
பந்தம் என்று வந்தாய்
சொந்தம் என்று சொல்லியே
வந்தனமாய் சந்தனமாய்
மனதிற்குள் மணந்தாய்
உயிராய் வந்தாள்
உறவாய் ஆனாள்
உரிமையை கொண்டாடினாள்
உள்ளத்தில் கலந்தாள் - புது
உலகை கொடுத்தாள்
என்னில் சரிபாதி அவள்
அவளின் சரிபாதி நான்
சிவன் சக்தியாக கலந்தோம்
சிறப்பாய் வாழ்வோம்
சிகரத்தை தொடவே
என்னை ஆட்டி வைக்கும் பாகன் அவள்
அவள் என் இதயத்தை ஆள
எனையாளும் என்னுயிரின் காவல் நான்
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
No comments:
Post a Comment