என்று விடுதலை
_________________
வருடம் இருநூற்றாண்டை கடந்தே,
இந்தியாவுக்கு விடுதலை!
பாமரனின் வறுமைக்கு என்று விடுதலை!
பசிக்குத் தான் என்று விடுதலை!
பிச்சைக்காரர்களுக்கு என்று விடுதலை!
பஞ்சம், பட்டினிக்கு எப்பொழுது விடுதலை!
லஞ்சத்திற்கு என்று விடுதலை!
அவலைபெண்ணிற்கு என்று விடுதலை!
இந்த தலைகள் கிடைத்துவிட்டால்
அன்றே விடுதலை இந்தியாவிற்கு!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருத்தாசலம் இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment