Wednesday, 9 May 2018

அழகின் சிரிப்பில் நீங்கள்?


அழகின் சிரிப்பில் நீங்கள்?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ - - - - -
சல சல என்று ஓடிய நீர்நிலையில்
மழலைச் சத்தங்கள் நிறைந்திடும்
தண்ணீர் இல்லாத ஓடைகள்
ஊற்றே இல்லாத கிணறுகள்
மழலையின் கொஞ்சல் அழகெங்கே?

கட கட என்று கட்டை வண்டிகள் ஓடும்
மாட்டு வண்டிகள் மூச்சிறைக்க ஓடும்
குதிரை வண்டிகள் கூவமாய் ஓடும்
கழுதையும் பொதி சுமந்து நடக்கும்
சுற்றிலும் பசுமை காடுகள் தெரியும்
இவையெல்லாம் எங்கே சென்றது,

மண் சாலை நாற்கர சாலையானது
சாலைகள் புழுதியானது
காற்று மாசானது
கடலும் நாசமானது
வானமும் புகையானது.
மும்மாரி பொழிந்தது.
இயற்கை சிரித்தது,
காலம் சரிந்தது,
மூன்று வருடம் கடந்தும்
இயற்கை சிரிக்கவில்லை
பூமி வறண்டது?
உயிர்கள் அழுதது.
செயற்கை மட்டுமே சிரிக்கிறது
இயற்கையோ அழுகிறது,
தன் அழகை காணவில்லையே என்று.
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா

ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு
___________________
ரௌத்திரம் பழகு
காம வெறியர்களை ஓட விடு
நாட்டின் மாணிக்கம் என்பதை மறவாதே
என்றும் பெண்ணென்று மண்டியிடாதே
அரிவாளை சுழற்று
அறிவால் அடக்கு
காமுகர்களை களையெடு
பெண்ணின் பெருமையை உணர்ந்திடு
மற்றவர்க்கும் உணர்த்திடு
குடும்பத்தின் விளக்காய் மாறிடு
புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்த்திடு
கணவன் முன் மாதவியாய்
சேவைகள் செய்திடு
களங்கமே வந்தாலும்
கண்ணகியாய் வாழ்ந்திடு
- - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா

உணவு

உணவு
- - - - - - - - - - - - - -
இரை இறைவன் கொடுக்கும் வரம்//
பதம் தேடி நித்தம் உண்டு //
உடலை வளர்க்க அல்ல உணவு //

விடியலுண்டு விழித்திடு

விடியலுண்டு விழித்திடு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
இரவு முடிந்தால் பகலும் பிறக்கும்
சூரியன் உதித்தால் சந்திரன் மறையும்
கடலும் இருந்தால் கரையும் இருக்கும்
மலையும் இருந்தால் மழையும் சுரக்கும்

உரிமைகள் பறிக்கப்பட்டால்
உணர்வுகளை அடக்கி விடு
பறித்து விட ஒருவன் உண்டென்றால்
கொடுப்பவன் ஒருவன் இருந்திடுவான்

விதிகள் மீறப்பட்டால்
விடியல் அருகில் உண்டு
வீணாய் விவாதம் வேண்டாம்
விடியும் போது வெற்றிப் பிறக்கும்

சட்டங்கள் பொய்யாகலாம்
எதிரிகள் தப்பித்து விடலாம்
உறவுகள் கைவிடலாம்
விடியலுண்டு விழித்திடு

கைவிடு உறக்கத்தை
ஆழ்ந்து சிந்தித்திடு
கனவுகளை கலைக்காதே
வெற்றிகள் கூடி வரும்
கைவிட்ட உறவுகளும் தேடி வரும்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
அன்புடன்
விருதை வீரா

புன்னகையே பொன்னகை

புன்னகையே பொன்னகை
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
புன்னகையே பொன்னகை
என்று மாறும்
தங்கத்தின்  தாக்கம்
பெண்களுக்கோ ஏக்கம்
வரதட்சனையின் முதலிடம்
புன்னகையை பறித்திடும்
பொன்னகையின் புகழ்
பரப்பிடவே இந்நாளாம்
-------------------------------
அன்புடன்
விருதை வீரா


மோக கொலை

கொலை தொடர்புக்கு அப்பால்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பெண் ஒரு மோகப் பொருளா//
கண்களுக்கு காட்சிப் பொருளா//
ஆண் வர்க்கத்தின் காமப் பொருளா//
என்னப் பாவம் செய்தாள்//
எத்தனை கண்களுக்குத்தான் //
அவள் விருந்தாவாள், //
காணும் போது ரத்தம் கொதிக்கிறது, //
அவள் நாணும் போது நெஞ்சம் வெடிக்கிறது //
பெண் பச்சைக் குழந்தையாகினும் //
காமப்பசிக்கு இரையாகிறது //
அந்த இறை கண்டும் காணாமலும்//
சிலையாக நிற்கிறது//
ஆடை எப்பொழுது ஒதுங்கும் //
என அற்ப சுகம் தேடும் மானிடா //
உன் தாயிடம் கேள்//
பெண்மையின் வலிகள் தெரியும் //
உன் மனைவியிடம் கேள்//
பெண்ணின் பெருமைகள் புரியும் //
புரிந்தும் திருந்தாத மானிட விலங்கே //
உன்னை கருணை கொலை செய்ய வேண்டுகிறேன்//
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா

உறவாய் வா உறவே

உறவாய் வா உறவே
- - - - - - - - - - - - - - - - - - - -
உறவாய் வா உறவே
உயிராய் உனை காப்பேன்
உண்மையாய் உனை நேசிப்பேன்
உறவில் கலந்த உயிராய் சுவாசிப்பேன்

நெஞ்சில் கூடுகட்டி
தாயாய் தாலாட்டுவேன்
ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி
தோழனாய் சோறூட்டுவேன்

இதயத்தில் உன் மனதை சிறை வைத்து
விரைவில் மணம் முடிப்பேன்
உன் மூன்று முடிச்சியில்
என் உயிரை குடிவைக்க,
உள்ளத்தில் குடியேற உறவாய் வா ,
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
விருதை வீரா