கவிச்சோலை
- - - - - - - - - - - - - -
பச்சை கானகத்தில்
பசுந்தளிர் கூடாரத்தில்
கூவிடும் குயில் கூட்டத்தில்
ஆடிடும் மயில் ஆட்டத்தில்
மலராய் மலர்ந்தவளே
தேன் மழையை சொரிபவளே
தீந்தமிழாய் மணப்பவளே
வண்ணத்துப்பூச்சி உன்னை
சுற்றுவதேனோ
உன் கண்ணில் காதல் தீ
பரவியது தானோ
அதற்கு காரணம் நான்தானோ
விடையை நீ தருவாயோ!
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment