இந்த நொடி நகராமல் நின்றாலென்ன
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கூந்தலின் ராணியே
உன் கைப்பிடித்து நடந்திட
ஆசை
கையை தொடும் வேளையில்
எட்டி நீயும் போனதேனோ!
கண்ணழகியே,
உன்னை என்றும்
எந்நேரமும்
கண்ணால் ஆராதிக்க ஆசை
பார்த்த நொடியில்
மறைந்து போவதேனோ!
தெற்றுப்பல்லழகியே,
முத்துப் பல்லை
ரசித்திட ஆசை
பேச முயன்றேன்
என்னை தவிர்த்து போனதேனோ!
நீயும் கானல் நீரோ
உதடுகளின் அசைவினை
சுவைத்திட ஆசை
உன் உள்ளத்தில் குடியேற ஆசை
எண்ணற்ற ஆசைகளை
நிராசையாக்கிச் செல்வதேனோ!
என் கனவு நாயகியே
கண்டேன் கனவினை
நினைவில் வாழ்கிறேன்
ஆசைகள் தீர்கின்றன
என் காதல் குறையவில்லை
அப்படியே !
இந்த நொடி நகராமல் நின்றாலென்ன
நான் கனவில் மட்டுமே
எந்நேரமும்
இருந்தாலென்ன!
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment