சீறிப்பாயும் அருவியே
- - - - - - - - - - - - - - - - - - - -
சீறிப்பாயும் அருவியே
உன் பிறப்பிடம் மலையோ
மலையரசியிடம் பிறந்தும்
சீற்றம் உனக்கு தேவைதானோ
பனிக்கட்டி உருகியே
அருவியாய் பிறந்தாய்
மலைகளில் தவழ்ந்தாய்
அருவியாய் அடிவாரத்தில் ஊற்றெடுத்தாய்
காடு, மேடு அலைந்தாய்
கழனியெல்லாம் புகுந்தாய்
தரணியெல்லாம் செழிக்கவே
சமவெளியில் தஞ்சம் அடைந்தாய்
நதியாய் மாறினாய்
நீயும் தாயானாய்
எத்தனை உயிர்களை காக்கின்றாய்
ஏரி குளம் நிரப்பிடவே
சீறி வந்து சிறு கிளைகளாய் பிரிந்தாய்
உனக்கு பெயர்கள் தான் எத்தனையோ
கங்கை, காவிரி
பெண் பெயரிட்டு அழைத்தோம்
தெய்வமாய் வணங்கினோம்
ஐம்பூதத்தில் ஒன்றாம் நீ
அகிலத்தையும் காக்கின்றாய்
வேளாண்மையை செழிக்க வைத்தாய்
உன்னை போற்றிடவே
ஆடி பதினெட்டில் வணங்கிடுவோம்
பார் போற்றும் நதிகளை
பங்குப் போட
நாடகங்கள் நடக்கிறதே
அதில் எத்தனை அரசியல்கள்
பெருகி வருகையில்
சேமிக்க துப்பில்லை
தடுப்பணைகள் கட்ட வில்லை
உன் பெருமை அறியவில்லை
சீற்றம் கொண்டு வந்தாய்
வீணாக கடலில் கலந்தாய்
வறட்சி வந்தது
அருவியே உன் அருமை தெரிந்தது,
- - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
No comments:
Post a Comment