ஆண் பெண் இணைந்தால் வாரிசு
மண், விதை இணைந்தால் விருட்சம்
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கருமை பசுமை செழுமை செம்மை
என்றும் மாறாது இந்த வெண்மை
- - - - - - - - - - - - - - - - - - - - -
ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை
படமே சாட்சியாக, மனதில் உணர்த்திவிடும்
- - - - - - - - - - - - - - -
ஆணின்றி பெண் இல்லை - அந்த
கடவுள் இன்றி இங்கெதுவும் இல்லை
- - - - - - - - - - - - - - - _
அன்புடன்
வீரா
Wednesday, 14 March 2018
படக் கவிதை
Tuesday, 13 March 2018
வார்த்தையால் வதைத்தாய்
வார்த்தையால் வதைத்தாய்
------------------------------------------
வண்ணமுகில் கண்ணழகியே
மயில் தோகை கூந்தலழகியே
செவ்விதழ் உதட்டழகியே
முத்து முத்து பல்லழகியே
அக்கம் பக்கம் நின்றேன்
மாறி மாறிப் பார்த்தேன்
திசையெல்லாம் நோக்கினேன்
சீவி சிங்காரித்து வந்த என் கவியே
பின் தொடர்கிறேன் என்றாய்
வசைப்பாடினாய்
வார்த்தையால் வதைத்தாய்
பேச்சினால் சிறையில் தள்ளினாய்
தூயக் காதலை அறியா நீ
உண்மை அன்பை
புறக்கணித்தாய்
வார்த்தையால் கொன்றுவிட்டாய்
உன் நினைவில்
நான் உயிரற்ற சதையானேன்
-----------------
அன்புடன் வீரா
ஈற்றுச்சீர்
ஈற்றுச்சீர் போற்று
____________________
அன்பை நான் கற்க வேண்டும்
அம்மா எனக்கு மகளாக வேண்டும்
அறிவில் நான் தெளிவுற வேண்டும்
அப்பா எனக்கு மகனாக வேண்டும்
அன்புக்கு சாதி தடையில்லை
அன்புக்கு சாதி தடையில்லை
மதமும் தேவையில்லை
மொழியும் வேண்டாம்
நல்ல மனம் போதும்
மனதில் வஞ்சகம் வேண்டாம்
சூழ்ச்சிகள் எண்ணிட வேண்டாம்
பொறுமை குணம் வேண்டும்
புரிதல் மட்டும் இருந்தால் போதும்
பரிசுத்த அன்புக்கு
பாம்புக் கூட நட்பு கொள்ளும்
வாத்திடம் குழந்தை காட்டிடும் அன்பு
நட்புக்கு இலக்கணம்
இலக்கியம் பேசிடும் மனிதா
இந் நட்பை நீயும்
மனதில் கொள்ளடா!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
ஆற்றில் போட்டாலும் அளந்து போடு
_______________________________________
ஆற்றில் போட்டாலும்
அளந்து போடு
கிணற்றில் போட்டாலும்
எண்ணிப் போடு
அகத்தில் போட்டாலும்
கணக்கிட்டுப் போடு
வரவு எட்டனா
செலவு பத்தனா
வரவை பெருக்குவோம்
செலவை குறைப்போம்
சேமிப்பை பெருக்குவோம்
மிதமிஞ்சிப் போனதா
தானங்கள் செய்திடு
கணக்கில் சேர்த்திடு
குடலில் போட்டாலும்
வேண்டியதை போடு
வேண்டாதவையின் சேர்க்கையே
நோயின் ஆரம்பம்
உணவுக் கட்டுப்பாடு
அவசியம் தேவை
உள்ளம் நலம் பெற
உடல் நன்றாக வேண்டும்
அளக்காமல் போட்டால்
நோய்கள் அண்டிடும்
உடலும் குன்றிடும்
உள்ளமும் வாடிவிடும்
ஆரோக்கியம் முக்கியம்
உயிர் வாழ அவசியம்
ஆற்றில் போட்டால்
செல்வம் குறைந்திடும்
அகத்தில் போட்டால்
ஆயுள் குறைந்திடும்
அளவாய் போட்டு
ஆரோக்கியமாய் வாழ்வோம்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
கவிச்சோலை
கவிச்சோலை
- - - - - - - - - - - - - - -
கடலின் குழந்தையே
அலைகள் உனக்கு ஊஞ்சல்
பேரலைகள் உனக்கு தாலாட்டு
ஓடங்கள் உமக்கு விளையாட்டுப் பொருள்
உம்மை கண்ட மனிதர்களோ
மெய் மறந்து போவார்களே
உங்கள் கொஞ்சும் விளையாட்டுக்கள்
ரசனையைத் தூண்டும்
துள்ளி விளையாடுகையில்
பள்ளி குழந்தைகளாய்
மீனவர்களின் தோழனாய்
அவைகள் வழிக்காட்டும் வந்தனமாம்
--------------------------------------
அன்புடன்
வீரா
திருடிய இதயத்தை
திருடிய இதயத்தை
- - - - - - - - - - - - - - - - - - -
திருடிய இதயத்தை திருப்பித் தருவாயா
நீ திருடிய மனதில் காதலை வடிப்பாயா
வாங்கிய முத்தம் நினைவுச் சின்னமாய்
மனதில் பதித்த வைரக் கல்லாய்
உன் சுவடுகள் என்னில் ஆயிரம் இருக்க
கடலலையாய் அழித்து சென்றாயோ
கல்லில் செதுக்கிய ஓவியம் நானோ
நீ அழித்தும் உயிர் பெற்றேனே!
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
உயிலெழுதி தந்தாய்
உயிலெழுதி தந்தாய்
- - - - - - - - - - - - - - - - - - - -
உறவாய் வந்தாய்
உயிராய் நின்றாய்
உள்ளத்தின் நகலானாய்
அன்பினை தந்தாய்
உற்ற தோழியானாய்
அன்பில் தாயானாய்
அறிவில் ஆசானாய்
ஆலோசனையில் தந்தையானாய்
பக்தியில் தெய்வமானாய்
உன்னை எனக்கே
உயிலெழுதி தந்தாய்
_________ - - - - - - - - - -
அன்புடன்
வீரா
தேவை சிந்தனை
தேவை சிந்தனை
__________________
சிந்தனை செய்திடும் நெஞ்சம் கொண்டு
ரத்தம் சிந்தாமல் போராடிட
கோபம் குறைந்து சாந்தம் மலர்ந்திட
எதிரிகள் அஞ்சிட வெற்றிகள் மலர்ந்திடவே
- - - - - - - - - - - - - - - - - - - - - -
சிந்தனை
- - - - - - - -
சிந்தனை உதவிடும் சிக்கலை தீர்த்திடும்
மனமோ சிறகுகளை வீசி பறந்திடும்
நீண்ட நெடிய கனவுகள் நினைவாகும்
மந்தம் குறையும் உணர்ச்சிகள் பெருகும்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
காட்சியும் கானமும்
காட்சியும் கானமும்
-----------------------------
ராமனுக்கே முடிசூட்டும் படலம்
மகிழ்ச்சியில் ஓடினான்
மன்னன் தசரதன், மனைவியை நாடி
கைகேயி அந்தபுரம் வந்தான்
பொருட்கள் சிதறிக் கிடக்க
மாளிகை வெறுமையாக காட்சியளிக்க
பார்த்தான் தசரதன்,
சாந்த மனைவியை புகழ்ந்தே வந்தான்
தலைவிரிக்கோலத்தில் மனைவியைக்
கண்டான்
கைகேயி சரிந்துக் கிடக்க
நெஞ்சம் பதைக்க,
கைகேயியை கையில் ஏந்த
மேல் பட்ட கையை
தட்டி விடாமல் பட்டும் படாமல்
நகர்ந்தாள்
நீண்ட கெஞ்சல் ,
மனைவிக்கு என்ன ஆனதோ
படபடக்க தசரதன் கேட்டான்
தனக்கு இரண்டு வரம் கேட்டாள்
பரதன் நாடாள, ராமன் காடாள
வரம் கொடு என்றாள்
சரிந்து விழுந்தான் தசரதன்
பாம்பிற்கு பால் வார்த்தோம்
என்ற அச்சம்,
அன்பான மனைவியின்
திடீர் விசும்பல்,
காட்டேரியான கைகேயி
பரதனே நாடாள
வரத்தை கேட்டாள்
மனைவி காலில் விழுந்தான் கணவன்
மண்டியிட்டான், கதறினான்
கல் நெஞ்சம் கொண்டாள் கைகேயி
பிடிவாதத்தில் உறுதி கொண்டாள்
பரதன் ஆளட்டும் நாட்டை
ராமன் ஆளட்டும் காட்டை
நான் ஆள்கிறேன் சுடுகாட்டை
உன்னை மகிழ்ச்சி ஆளட்டும்
சாபம் கொடுத்தே
விடைப் பெற்றான் தசரதன்
எண்ணம் ஈடேறியதில்
தசரதனை வென்றாள் கைகேயி
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
கவிச்சோலை
கவிச்சோலை
________________
மண்ணில் போர்த்திய பசுமை
செழுமையின் அடையாளம்
வானத்தில் கூடும் மேகக்கூட்டம்
மழைக்கு அச்சாரம்
குயில்கள் கூடி கூவிடும்
மயில்கள் தோகை விரித்தாடிடும்
அந்தி மாலைப் பொழுதும்
அதிகாலை உதயமும்
பறவைகள் சிறகை விரித்து பறந்திடும்
ரம்மியக் காட்சிகள் மனதை கரைக்கும்
காட்சிகள் மனதில் நிலைத்திடும்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
பூந்தளிர்
பூந்தளிர்
- - - - - - - - - - - - - -
நேற்று மொட்டானாய்
இன்று மலர்ந்தாய்
நாளைய பூந்தளிர் நீ
காயாகி, பழமாகி
விதையாகி விருட்சமாய் வளர்ந்திட
நல்லதை அனுபவித்து அறிந்திட
கெட்டதை அறிந்து தவிர்த்திட
நல்சொல் கேட்டு வளர்ந்திட
தீயவை கண்டால் குருடாகி
தீச்சொல் கேட்டால் செவிடாகி
நல்லதை கேட்டிட வேண்டும்
நல்லதை பார்த்திட வேண்டும்
இன்முகம் மலர்ந்திட வேண்டும்
என்றும் விழிப்பாய் வாழ்ந்திட வேண்டும்
பூவுக்கு வண்ணமுண்டு
வாழ்க்கை வண்ண மயமாகட்டும்
மலருக்கு வாசம் உண்டு
உன் எதிர்காலம் சிறப்பாகட்டும்
நல்லறிவுப் பெற்று
ஆயிரம் குழிகளை கடந்து
எதிரிகளை வெற்றிக் கொண்டு
துரோகத்தை அழித்து விட்டு
சாதனைகள் செய்திட வேண்டும்
அவதூறுகளை தவிடு பொடியாக்கி
ஆணிற்கு சமமாய் திரிந்திட வேண்டும்
மங்கையற் குலத்திற்கு
பெருமை செய்திட வேண்டும்
உன் கண்களை
ஆயிரம் கண்கள் நோக்கிட வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
சத்தம் போடாதே
சத்தம் போடாதே
பிரம்மன் படைத்த
அழகிய கவிதையை ரசிக்கின்றேன்
ஆழ்ந்து சிந்தனை செய்கிறேன்
கவி படைத்து அணிய விரும்புகிறேன்
ஏற்றுக்கொள் அன்னமே!
- - - - - - - - - - - - - - -
அன்புடன் வீரா
ஏழை
வெற்றி
- - - - - - - - -
ஏழ்மை இறைவன் கொடுத்த வரம்
நம் முயற்சியின் வித்து ஏற்றம்
ஏற்றி விடும் வாய்ப்புக்கள் பல உண்டு
தோல்வியை படியாக்கி ஏழ்மையை வென்றிடலாம்
____________________________________
வெற்றி
- - - - - - - -
ஏழ்மையில் உழன்று வறுமையை வென்று
பொறுமையை காத்து பெருமையை அகற்றி
முயற்சி என்ற வித்தை விதைத்து
வெற்றி எனும் மகசூல் எடுப்போம்
நேரெதிர்
நேரெதிர்
- - - - - - - - - - - - - - -
அடைப்பட்ட கூண்டுக் கிளி
ஏக்கத்தில் பார்க்கிறது
சிறகை விரிக்கும்
சுதந்திரக் கிளியை!
கூண்டிற்குள் உணவும் உண்டு
தண்ணீரும் உண்டு
ஆறுதல் சொல்ல ஆதரவும் இல்லை
கொஞ்சி பேசிட குழந்தைகள் இல்லை
தனிமையில் சுழலும் வாழ்க்கை சக்கரம்
ஆயுள் முழுதும் பாதுகாப்பு கவசம்!
சுதந்திரக் கிளியோ
தேடி உணவு உண்டு
உறவுகளைக் கண்டு மகிழ்ந்து
குழந்தைகளை கொஞ்சி
இலைமறைவாய் வாழ்கிறது
வேடன் அம்பிற்கு பயந்து
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
கைதாக்கவா
கைதா(க்)கவா
- - - - - - - - - - - - - - -
சுட்டு விடும் பார்வையால்
சுடர் விடும் விழியினால்
அழகிய இமைகளால்
நெஞ்சத்தை கொள்ளையடிக்க வா
இமைத்தென்னை சிறையில் வைத்தாய்
உன் கண்ணில் அடைக்கலம் ஆனேன்
கண்ணீர் கடலில் மிதக்கின்றேன்
கருவிழியில் என்னை சிறைவைத்தாய்
செவ்விதழ் உதடுகளால்
சிவந்த முத்தம் தந்தாய்
மயக்கம் தெளியும் முன்
தூக்கம் கலைந்தது
என் கனவையும் களவாடிவிட்டாய்!
கொடியிடை இடுப்பும்
அழகிய நளினமும்
மயில் தோகையாய் கூந்தலும்
இன்புற செய்கிறது
இத்தனை பரவசம் ஏனோ
உன்னில் விழுந்தேன்
என்னை கைதா(க்)கவா
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
எந்தன் நெஞ்சில்
எந்தன் நெஞ்சில்
நீங்காத தென்றல் நீதானா
______________________________
நாட்களை எண்ணியிருந்தேன்
மணம் முடிப்பது எப்பொழுதென
ஆசைகளை அடுக்கி வைத்தேன்
அடுக்கடுக்காய் ஆவாரம் பூவென
அந்தி சாயும் மாலையிலே
மாலையிட காத்திருந்தேன்
அருகம்புல் சாராக
உனை அருந்திட ஆவல் கொண்டேன்
கரும்புச் சாராய் உனை நான் நினைக்கவில்லை
இனிப்பாய் நீ இருந்திட்டால்
என் காதல் நோய் தீர்ந்திடாது
அருகாய் அருந்தியே
இளமையுடன் காத்திருப்பேன்
இமைகள் மூடாமல் இருப்பது ஏனோ
விழியில் நீ குடியேறினாய்
இமயமாய் நான் இருந்திடுவேன்
அருவியாய் நீ ஊர்ந்து வா
ஆலமரமாய் நானிருக்க
பச்சைக்கிளியாய் வந்து குடியேறிட வா
உடலாய் நானிருக்க
உயிராய் நீ வருவாய்
தசையாக நான் மாறிடவே
அதில் நரம்பாய் நீ பதிந்திடுவாய்
இதயம் நான்
அதில் ஊரும் ரத்தம் நீதானே
நெஞ்சம் என்னுடையது
அதில் தென்றலாய் வந்தமர்ந்திட வா
- - - - - - - - - - - - - - - - -
அம்மாவுக்கு பத்து
1.அம்மாவுக்கு பத்து
- - - - - - - - - - - - - - - - - - - -
மூன்றெழுத்து மந்திரம்
உயிர் கொடுத்த தந்திரம்
விதையினால் செடியாகி
மரமாகி, பூவாகி
கல்லடிகள் பல பட்டாய்
மனம் புண்ணாகி வெந்தாய்
பெண்ணாய் பிறந்ததாலே
உதிரத்தின் உதவியாலே
என்னை உதிர வைத்தாய்
எமன் வீட்டு கதவை தட்டியே
மீண்டும் பிறந்தாய் நீயே
என் தாயே!
அம்மா என்ற என் ஆன்மாவே
நீ இருக்கும் இடம் நோக்குகிறேன்
மனதால் வணங்குகிறேன்
----------------------------------
2.
மூன்றின் அம்சம் நீ
அன்பின் அடையாளம் நீ
பாசத்தின் ஊற்றாய் நீ
தாலாட்டும் போது கலைவாணியாய்
சீராட்டும் போது தேவியாய்
கண்டிக்கும் போது பராசக்தியாய்
மும்மூர்த்திகளின் வரமாய் நீ
எழுந்தருளினாய் அன்னையாய்
எனக்கு தாயாய் ஆனாய்
உயிர் கொடுத்தாய் எனக்கு
வணங்குகிறேன் அன்னையே!
தாய் என்ற பதவியளித்தேன் உனக்கு
எனக்காக மெழுகாய் உருகி
வாழ்வு முழுவதும் ஒளி வீசுகிறாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
3.
இரவு பிறந்தது
பெற்ற மகனை காணலையே
முச்சந்தி வரை அரவம் இல்லை
பதை பதைத்தது மனம்
துடிதுடித்தது நெஞ்சம்
சூடானது ரத்தம்
நித்தம் இதே கதையாக
ரத்த கொதிப்பின் வரவை
தடுக்க மகன் தான் வருவானோ!
உளறல் சத்தம் கேட்க
ஆபாச வார்த்தைகள் காதை பிளக்க
மது அரக்கனின் பிடியில் கண்டாள் மகனை
அவள் கண்ணில் அங்கே ரத்த நீர்
மனம் ஊனமாகி
உடல் முடமாகி
கேட்கத்தான் நாதியன்று
கிடந்திட்டால் தரையில் கிழத்தியாய்
பார்க்காமல் சென்றிட்டான் மகன்
கண்ணே சாப்பிடடா,
குடல் ஓட்டிடுமடா /
கவலையான குரலில்
காதுகள் அடைக்க
வாய் குழற
ஏதும் உண்ணா வெற்றுடலாய்
மகனிடம் கூறுகிறாள்,
தாய் பாசத்தின் உச்சக்கட்டம் இது தானோ,
_____________________
4.
பெற்ற தகப்பன் ஏழை
அவனுக்கு பிறந்ததோ பெண்
முன்னவளும் பெண்,
பின்னவளும் பெண்ணாக
கள்ளிப்பால் எட்டிப் பார்த்தும்
அவள் தாயின் கண்ணீரால் காக்கப்பட்டாள்,
வளர்க்கப்பட்டாள்,
கட்டிளங்குமரியானாள்,
அத்தை மகனை மணம் செய்தாள்,
தலையில் எழுதிய எழுத்தோ என்னவோ
அங்கும் அவளை ஏழ்மை குடிகொண்டது
மணி முக்தாற்றங்கரையிலே
வண்டல் மண்ணில் உழுதாள்,
உழன்றாள்,
களை வெட்டி, நீர் பாய்த்து,
நடவு நட்டு ஏழ்மையை துரத்த
பாடுபடவே பிறந்த ஜென்மமாய்
என்னையும் பெற்றெடுத்தாள்
ஏழ்மைக்கு தத்துக் கொடுத்தாள்,
நான் செல்ல முடியா தேசம் சென்றாள்,
கலிகாலத்தில்
தன்னந்தனியாய் விட்டுச் சென்றாள்,
மழையைக் காணா பயிராக
தாயை காணாமல் தவிக்கிறேன்
அன்புக்கு நான் ஏங்கி நின்றேன்,
தாயை விலை கொடுத்து வாங்க
ஆசை கொண்டேன்,
தாயார்கள் பலர் இருக்க
அவள் அன்பிற்கு நான் அடிமையாக
அந்த தாய்பந்தம் கிடைக்குமோ என்று
ஏக்கத்தில் தவிக்கிறேன்,
உயிரை துறந்து
மறு ஜென்மம் நானெடுத்து
தாய் பாசத்தை அனுபவிக்க போகின்றேன்,
நான் செல்லும் பாதை சரிதானே
- - - - - - - - - - - - - - - - - - - - - -
5.
மேகம் இன்றி வானம் கருக்காது
மழையின்றி பயிர் வாழாது
ஒளியின்றி பனித்துளி உருகாது
வானம் இன்றி சூரியன் இருக்காது
நிலவு இன்றி இரவுகள் போகாது
கரையைத் தாண்டி அலைகள் கடக்காது,
தென்றல் இன்றி கவிதைகள் பிறக்காது
மொழியின்றி மவுனங்கள் கலையாது
சுடர் இன்றி இருளும் அகலாது
சுவர் இன்றி சித்திரம் இராது
சோலையின்றி கரும்பும் வளராது
குருத்தொடிந்து மரமும் வாழாது
பெண்ணின்றி ஆண் வர்க்கம் தழைக்காது
ஆடவர் இன்றி பெண்ணால் ஆள முடியாது,
ஆணும் பெண்னும் சமமாக
பெற்றெடுத்தவள் வளர்க்க வேண்டும்
வேறுபாடுகள் களைய வேண்டும்
அம்மா அதிகாரம்
பேதமைகளை களைய வேண்டும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
6.
அன்பை ஊட்டினாய்
ஆணவத்தோடு வளர்த்தெடுத்தாய்
இன்முகம் கொண்டவளாய்
ஈகை குணம் கொண்டு
உதவிகள் செய்திட்டாய்
ஊருக்கெல்லாம் முன்மாதிரியாய்
எரும்புக்கும் உணவளித்தாய்
ஏறுவைப் போல் காத்திட்டாய்
ஐந்தினை நிலங்களிலும்
ஒற்றுமையை வளர்த்திட்டாய்
ஓங்கிய புகழின் உச்சத்தில்
ஒளவையை போல் விளங்கிட்டாய்
அஃதுவே அன்னையின் குண நலன்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
7.
அன்பை ஊட்டிய தாயே
அறிவையும் வளர்த்தாய் நீயே
பொறாமைகளை வெறுத்தாய்
புறம் கூற்றுக்களை நிராகரித்தாய்
உதவிகள் செய்திட கற்று தந்தாய்
இனிமையாய் பேச பழக்கிட்டாய்
உறவுகள் தேவையென்றாய்
உற்றார்களுக்கு உதவிட செய்தாய்
மூத்தோரை வணங்க செய்தாய்
இறைவனை தொழுதிடு என்றாய்
உபசரிக்க உத்தரவிட்டாய்
உழைக்கவும் கற்றுத் தந்தாய்
தானங்கள் செய்திடு என்றாய்
தர்மம் தலையை காக்க வைத்தாய்
தவறுகளை திருத்திடு என்றாய்
மீறும்போது கண்டித்தாய்
தண்டிக்க நான் இல்லை
கண்டிப்பதே தாய் வேலை என
உணர வைத்தாய்
அன்னை என்ற பதவியினால்
அதிகாரம் காட்டாமலே
அரவணைப்பால் உயர்த்திட்டாய்
உயர்ந்ததும் உமை காணாமல்
நான் உயர்ந்தும் என்னப் பயன்
- - - - - - - - - - - - - - - - - - - - -
8.
அன்னையை போற்றுவோம்
அம்மா என அன்பாய் அழைப்போம்
தாயே என தினந்தோறும் வணங்குவோம்
தயங்காமல் தவறாமல் உணவளிப்போம்
அன்னையின்றி பிள்ளைகள் இல்லை
பின்னே ஏன் அவளுக்கு முதியோர் இல்லம்
பாழாய் போகும் உறவுகள் வேண்டாம்
என்றும் நேசிக்கும் தாய் தான் வேண்டும்
மனைவி சுகம் தான் கொடுப்பாள்
தாய் தான் சுகமளிப்பாள்
தவறாமல் நேசிப்போம்
நித்தமும் பூஜிப்போம்
பூஜை அறைக்கு அனுப்பிடாதீர்
ஜென்மங்கள் பல பிறப்பெடுத்தாலும்
தாய் கிடைப்பது அரிது என்பார்
அம்மாவை காத்திடுவோம்
-------------------------------
9.
மானிட பிறப்போ
மிருக பிறப்போ
எப்பிறப்பு நீயெடுப்பினும்
தாயின்றி பிறப்பெடுக்க முடியாது
நாய்க்கும் உண்டு
நரிக்கும் உண்டு
காக்கைக்கும் உண்டு
குருவிக்கும் உண்டு
தாய் பாசம் மானிடனுக்கு ஏன் இல்லை
பறவைகள் தேடிச் சென்று
தன் குஞ்சுக்கு இரை ஊட்டிடும்
தன் குஞ்சை பொன் குஞ்சாய் போற்றிடும்
தாயும் தன் மகனை போற்றித்தான்
வளர்க்கிறாள்,
ஏனோ இறுதி காலம் வெறுமையாக
மகனின்றி வாடித் தான் போகின்றாள்
------------------
10.
நாயை வளர்த்தால்
தாய்க்கு வழிகாட்டும்
மகனை வளர்த்தால்
கண்ணீரை மட்டுமே வரவைக்கும்
பொல்லாத உலகில்
பொங்கி எழுந்து வளர்த்தாள் தாய்,
கலிகால காவலுலகில்
முதியோர் இல்லத்தில் வளர்க்கிறான்
தன் தாயை மகன் காத்திடுவதாய் நினைத்து
பாவ உலகில்
உன்னை பெற்றதால்
அன்னை புண்ணியம் அடைந்தாள்,
நீ பிறந்ததால்
பாவத்தை (உன்னை)அவள் சுமக்கின்றாள்
மலர்
மாற்றம்
- - - - - - - - -
மலர் மணக்கும்
அதனோடு சேர்ந்த நாரும் கமக்கும்
நல்லவர்களோடு தீயவர் சேர
நல்லவராய் மாற்றம் பெற்றிடுவார்
--------------------------
மலரும் குமரியும்
- - - - - - - - - - - - - - - -
மலர் வண்டுகளின் சொர்க்கம்
குமரிகள் காளையர்களின் தேன்கூடு
தேனை எடுத்த வண்டு மலரை பிரியும்
சுவை கண்ட காளையன் குமரியை தேடுவான்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வீரம்
வீரம்
-----------
அடுப்பூதும் பெண்ணுக்கு கல்வி வேண்டும்
சேவை செய்யும் சேவகிக்கு
வேலை வேண்டும்
குடும்பத்தை காக்க ஒரு பெண் வேண்டும்
நாட்டை காக்க பல பெண்கள் வேண்டும்
லாரி ஓட்டும் மானாக
விமானம் ஓட்டு விமானியாக
துப்பாக்கி ஏந்திய வீரச்சியாக
அறிவுகள் கொட்டும் களஞ்சியமாக
பெண்ணே நீ வளர வேண்டும்
வீரத்தில் ஜான்சிராணியாக
சேவையில் அன்னை தெரசாவாக
அர்ப்பணிப்பில் கல்பனா சாவ்லாவாக
விளையாட்டில் மிதாலி வீராங்கனையாக
வளர்ந்திட வேண்டும்
வீரமான பெண் என
உலகம் உன்னை போற்றிட வேண்டும்
- - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
காட்சி கவிச் சோலை
காட்சி கவிச்சோலை
- - - - -
உற்றார் உதவிட வேண்டாம்
நம் கைகள் நமக்கே உதவிடும்
உறவுகள் கைவிட்டாலும்
நம் இரு கைகள் ஊன்றுகோளாகிவிடும்
மனைவி (கணவன்) விட்டாலும்
கரங்கள் வீழ்ந்திட விடாது
பெற்ற மக்கள் பிரிந்தாலும்
கைகள் பெருமைப்படுத்தும்
தெய்வம் நம்மை புறக்கணிப்பினும்,
கைகளே கைவிட்டாலும்
நம் நம்பிக்#கை நம்மை காப்பாற்றும்
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
பெண்மையைப் போற்றுவோம்
பெண்மையை போற்றுவோம்
-------------------------------------------- --
தாயாக பாசம் தந்தவள்
தங்கையாக போட்டித் தந்தவள்
அக்காவாக அரவணைத்தவள்
அத்தையாக அன்பை தந்தவள்
பாட்டியாக அறிவை வளர்த்தவள்,
அண்ணியாக வந்து அம்மா ஆனவள்
பெரியன்னையாய் பேணிக் காத்தவள்
சிற்றன்னையாய் நம் சிறகை விரித்தவள்,
தோழியாய் தோள் கொடுப்பவள்
மனைவியாய் வந்து மொத்தமும் தந்தவள்
பெண்மையாய் பெருமை சேர்ப்பவள்
அவள் பெண்மையைப் போற்றுவோம்
பெண்ணியம் காப்போம்
-----------------------------------
அன்புடன்
வீரா
மறந்து விடு உயிரே
மறந்து விடு உயிரே
- - - - - - - - - - - - - - - -
மறந்து விடு உயிரே
மறக்க நினைத்தும் தோற்றுப் போகிறேன்
உயிரை துறக்க எண்ணியும்
உறவாட நினைக்கின்றேன்
என்னுள் என்ன மாயம் செய்தாய்
ஏன் என்னை ஏற்க மறுக்கின்றாய்
நினைவலைகள் முழுவதும் நீதானே
கலந்துள்ளாய்
ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய்
மறந்து விடு உயிரே
அவளை உன்னில் இருந்து பிரித்து விடு
அன்பை ஊட்டி கண்ணீரை பரிசளித்தாய்
என் கண்ணீரால் சாபமிடுகிறேன்
அவள் எனக்கே வேண்டுமென்று,
எங்கு சென்றாலும்
உடன் வருவதாய் நினைக்கின்றேன்,
நினைவுகளே என்னை கொல்லும்
ஆயுதமாக மாற்றியதன் ரகசியமென்ன
உயிரே என்னை கொன்று விடு
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
பெண்
உன்னத படைப்பு
- - - - - - - - - - - - - - - - -
பெண் வீட்டின் கண், நாட்டின் தூண்
குடும்பத்தின் நாடி துடிப்பு
உறவுகளின் உயிர் நாடி
மொத்தத்தில் அவள் ஒரு உன்னத படைப்பு
________________
உயிர்நாடி
- - - - - - - - - - - - -
பெண் பிறந்த வீட்டின் குல தெய்வம்
புகுந்த வீட்டின் இஷ்ட தெய்வம்
நாட்டின் குத்துவிளக்கு
அவள் உலகின் ஒளித்திரை, நம் உயிர் நாடி
- - - - - - - - - - - - - - - - - -
என்னை மறந்ததேனோ!
என்னை மறந்ததேனோ
- - - - - - - - - - - - - - - - - - - - - -
காட்டிலே மேட்டிலே
கழனியில் தண்ணீர் இறைத்து
வயிர் வாடி சுடு தண்ணீர் குடித்து
பசி மறுத்துப் போக,
தினையறுத்து வந்து
மலைத் தேனில் குழப்பி
உன் பசியாற்றிய என்னை
நீயும் மறந்ததேனோ!
கொசுக்கடியில் கொஞ்சி விளையாட
உன் மீது என் மாராப்பு போர்த்தி
நீ நிம்மதியாய் உறங்கிட
இரவு பொழுது கண் விழித்து
உன்னை காக்க
அவள் உறக்கம் கெடுத்து
உடல் வருந்தி வெந்த என்னை
நீயும் மறந்ததேனோ!
கண்ணீரே வாழ்க்கையாக
தண்ணீரே உணவாக
உன் நினைப்பே என் நினைவாக
உன் ஆயுளே என்உயிராக
உண்ண உணவின்றி
பத்து பாத்திரம் தேய்த்து
உன் வயிற்றை நிரப்பிய
என்னை ஏன் மறந்தாய் மகனே!
- - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
ஈரம்
ஈரம்
_____
இரும்பு மனதால் இருக்கி அனைத்து
எலும்பு தோல் போர்த்திய இதயத்தை
எனக்காக திறந்து வைத்தால்
உன் மனதில் ஈரம் பிறக்கும்
- - - - - - - - - - - - - - - - - - - - -
மனசாட்சி
__________
இரும்பு மனம் கரும்பு குணம்
ஈகை செய்ய நினைக்கும் குணத்தை
இரும்பு மனம் தடுக்கும்
மனசாட்சி ஊர்ந்து வந்து உருத்தும்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
மணி விழா
மணி மணியாய் செல்வங்களை பெற்ற
பெற்றோரே முதல் வணக்கம்,
இறைவனை காணவில்லை
தங்களையே கடவுளாய் தொழுகின்றோம்
இரவு பகல் பாராமல்
கண் விழித்து காத்தருளி
சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்கும்
எங்களின் மணிமகுடமே
மணி விழா வாழ்த்துக்கள்
இயற்கையின் குழந்தைகள்
இயற்கையின் குழந்தைகள்
- - - - - - - - - - - - - - - - - -
வாழ்க்கையின் நிறம் சிவப்பு
உழைப்பின் பெயரும் சிவப்பு
உழைப்பாளிகளின் சின்னமும் சிவப்பு
தேய்ந்த கைகளின் நிறமும் சிவப்பு
கொடுத்து கொடுத்து சிவந்தது
கொடுங்கோல் இயற்கையின் பிறப்பும் சிவப்பு
அதன் குழந்தையின் பெயரோ நெருப்பு
சுடர் விட்டு எறியுது நெருப்பின் குழம்பு
அனலாய் வீசுது சூரியனின் பிழம்பு
தண்ணீரும் குறையுது,
நிலமோ வறண்டது,
அனல் காற்றும் வீசுது,
ஐந்து பெற்றாள் அன்னை
ஒன்றுக் கூட ஓரினம் இல்லை
நீரோ பொங்கினால் சுனாமியாம்
நிலம் அதிர்ந்தால் பூகம்பமாம்
நெருப்போ கொழுந்து விட்டால் தீயாம்
காற்றோ சுழன்றடித்தால் சூறாவளியாம்
ஆகாயம் கனத்தால் பெருமழை வெள்ளமாம்,
காய்ந்தால் வரலாறு காணாத வறட்சியாம்
ஓன்று இல்லையேல்
நமக்கு இல்லை வாழ்வு
இதில் எது சினம் கொண்டாலும்
அழிந்திடும் நம் வாழ்வு
போற்றுவோம் அன்னையை
காப்போம் அதன் பிள்ளைகளை
மீட்போம் நம் வாழ்வுதனை,
நலம் பெறுவோம்
இயற்கையோடு இணைந்து வாழ்வோம்
---------------------
அன்புடன் வீரா