Saturday, 11 September 2021

மனைவிக்கு பிறந்த நாள் வாழ்த்து

இன்று பிறந்த நாள் காணும் எனது இனிய இதயத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பாலைவனமாய் 
இருந்த எனது வாழ்க்கை 
சோலை வனமாய் 
மாற காரணமானவள்!

தாய்க்கு பின் தாரம் என்பார்கள்
எனக்கு தாய்க்கும் மேலானவள்,
ஒவ்வொரு படிக்கட்டாய் 
கவனமாய் தாங்கி 
ஏற்றி விடும் வெற்றி தேவதைக்கு இன்று பிறந்த நாள்!

கடல் போல வந்து கவலைகளை மூழ்கடித்தவள்,
வானமாய் விரிந்து 
அன்பை பொழிவதில்
அவளுக்கு நிகர் அவளே!

பொறுமையில் 
பூமாதேவியும் 
என் தேவியை பார்த்து பூரிப்படைவாள்,
எனக்குள் சங்கீதமாய் ஒலித்திடும் சங்கீதத்திற்கு இனிய பிறந்த நாள்!

நான் தவறுகள் செய்திடும் போது நெருப்பாய் கொதிப்பவள்!
சிறகொடிந்த எனக்கு
சிறகாய் அமைந்தவளுக்கு இன்று உதயமான நாள்!

ஐம்பூதங்களாய் என்னை காக்கும்
என் இளம் வயது ஏக்கங்களை ஏந்தி 
எல்லாம் வல்ல இறைவன் அருளால் கிடைத்த சக்தி அவளுக்கான நாள்!

என்னுள் இதயமாய் குடிகொண்டு,
என்னை அவளின் இதயம் எனும்
கருவறையில் சுமக்கும் பேராற்றல்
இவ்வுலகில் உதித்த நாள்!

தனது ஆசை, எண்ணம் 
அனைத்தையும் துறந்து
எனது ஆசை எண்ணங்களை ஏற்று
என்னை ஆளும் என் மணவாட்டிக்கு
இன்று மகிழ்ச்சி திருநாள்!

ஒரு ஆண் பால் 
வாழ்வதும் வீழ்வதும்
பெண் பாலை சாரும்,
என்னை வீழ்த்தாமல்,
மற்றவர் வாழ்த்த 
தன்னையே வருத்திக் கொள்ளும் 
என் தங்கம் 
இந்த உலகத்தில் தோன்றிய 
பொன் நாள்!

நான் பிரகாசிக்க
என்னுள் கல்லாய் பதிந்து,
ஜொலிக்க வைக்கும் 
என் வைரத்தை 
நான் வாழ்த்தும் நாள்!

என்னில் சரிபாதியான 
என் அன்புக்கு, காதலுக்கு, அறிவுக்கு, புகழுக்கு
உகந்த நாள்! 
இன்று போல என்றும் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!
- - - - - - -
வீரா

Wednesday, 8 September 2021

த்ருஷா

ரோசாப் பூ பூத்தால் தான் அழகு,
திருஷா சிரிச்சாலே பேரழகு!

ஒவ்வொரு காட்சியிலும்
திருவிழா காட்சியாய்
கொள்ளை கொள்ளும்
இயற்கை அழகு அவள்!

சீன் போடும் தத்ரூபம்
அவளை விஞ்சிட
சினிமா உலகில்
நாயகிகள் யார் இருக்கா!

உலக அழகியை தேடி 
போட்டி வைக்கிறார்களாம்,
திருஷாவை காணா
நயவஞ்சகர்கள்!

மேக்கப் போட்டு அழகை கூட்டும் கன்னிமார்களே,
மேக்கப் இல்லா அழகியை,
காண கண் கோடி வேண்டும்!

திருஷாவை கண்டு
கண்வைக்காமல்
அவள் போடும் சீனை கண்டு
ரசித்து செல்லுங்கள்!

அவள் சிரித்தாள்
குத்தாளத்து அருவி ஆர்பரிக்கும்!

பேசினால் ஆலங்கட்டி மழை கொட்டும்!

நடந்தால் வாத்துகள்
தெரித்து ஓடும்!

வெட்கப்பட்டால் மொட்டுகள் கூட  சிவந்து மலரும்!

அவள் பேரழகை காண
ஒரு பூ கொடுத்தால் போதும்,
மயக்கிவிடலாம்,

மழை வரும் போது மட்டும்
தோகையை விரிக்கும் மயில் போல
பூ கொடுக்கும் போது மட்டுமே மயங்கும் பூங்குயில் அவள்!
😁😁😁😁💐💐💐