கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரனூர் கிராமத்தை சேர்ந்த ராசவன்னியன் மகன்கள் ராஜசிம்மன், நீதிராஜன். பன்னிரண்டாம், ஆறாம் வகுப்பு படிக்கும் இம்மாணவனர்கள் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் அறிவிக்கப்பட்ட, ஊரடங்கால், ஆன்லைன் மூலம் நடக்கும் வகுப்பு முடிந்த பின்பு, மீதமுள்ள நேரத்தை வீணாக செலவழிக்காமல், மரம், பிளாஸ்டிக் பொருட்கள், மினி மோட்டார் கொண்டு 360 டிகிரி சூழலும் திறன் கொண்ட மினி டிராக்டரை தயாரித்துள்ளார். கடைகளில் விற்கப்படும், ரிமோட் மூலம் இயங்கும் விளையாட்டு பொம்மைகள் முன்னும் பின்னும் நகரும் தன்மை கொண்டதாக மட்டும் உள்ளதாகவும், தற்போது குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட மினி டிராக்டர், ப்ளூடூத் வழியாக செல்போன் மூலம் இயங்கக் கூடிய தன்மை கொண்டதாக கிராமத்து மாணவன் தெரிவிக்கிறார். இம்மினி டிராக்டரில் செல்போன், லேப்டாப் பேட்டரிகள், ஒவ்வொரு சக்கரத்திற்கும் சிறியரக மோட்டார்கள், LED விளக்குகள், மரம் மற்றும் நாற்றங்காலுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்டவைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக மாணவன் தெரிவிக்கிறார். மேலும் மினி டிராக்டர் 360 டிகிரி சுற்றுவதற்கும், 30 மீட்டர் தூரம் வரை செல்வதற்கும், கட்டளைகள் இடுவதற்கும், Codeing மூலம் மினி டிராக்டரில் program பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கிறார். இந்நிலையில் மினி டிராக்டர் தயாரித்த பின்பு, அதன் மூலம் பயன்பெறும் வகையில், வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கும், தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதற்கும், தரைகளில் துடைப்பதற்கும், மரம் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலால் கொண்டு தனித்தனியாக பல்வேறு இயந்திரங்களையும் கண்டுபிடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில் பலூன் மற்றும் மரத்தை கொண்டு வயல்வெளியில் உள்ள, களைகளை அகற்றுவதற்காக மருந்து தெளிக்கும் தெளிப்பான் இயந்திரத்தையும் தயாரித்துள்ளார். இதனால் ஆட்கள் செலவு, நேரக் குறைவு, உள்ளிட்டவைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாணவன் தெரிவிக்கிறார். தற்போது உள்ள காலகட்டத்தில் மாணவர்கள் ஆன்லைன், ஆஃப்லைன் மூலம் பப்ஜி, ஃப்ரீ பையர் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடிக்கொண்டு நேரத்தை, வீணாக கழித்து வரும் சூழ்நிலையில், கிராமத்து பகுதியை சேர்ந்த மாணவன் ராஜசிம்மன், ஆன்லைன் வகுப்பை தவிர்த்து மீதமுள்ள நேரத்தை, வீணாக செலவழிக்காமல், தன்னால் முடிந்தவரை மினி டிராக்டர் தயாரித்து, அதன்மூலம் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் செயல்பட்டு வரும் இம்மாணவனின் கண்டுபிடிப்புகளுக்கு சுற்றுவட்டார பகுதியில் இருந்து, வெகுவாக பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Friday, 23 July 2021
விருத்தாசலம் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவன் நவீன ஏடிஎம் இயந்திரம் கண்டுபிடித்து சாதனை
விருத்தாசலம் அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவன்னியன். வயது 40. விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு நரசிம்மன், வயது 14 என்ற மகன் உள்ளான். இவர் பெரியவடவாடி தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் படுசுட்டியாக விளங்கும் இந்த மாணவன் தற்போது மினி நவீன ஏடிஎம் இயந்திரத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். தனக்கு கிடைத்த எளிய பொருட்களான தர்மாகோல், ஐஸ் குச்சி, பேட்டரிகள், வயர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு மினி ஏடிஎம் இயந்திரம் வடிவமைத்துள்ளார். ஒரு சின்ன மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருப்பது போலவே Oவி இருந்து 9வரை எண்கள் உள்ளன. பணத்தை உள்ளே வைத்துவிட்டு ரகசிய எண் குறியீடு பதிவு செய்தால் அந்த இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள பணம் வெளியே வந்துவிடுகிறது. மேலும் இதே போல ஏடிஎம் எந்திரத்தில் கூட இல்லாத வசதியான சில்லரை காசுகள் ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது. ரகசிய எண்ணை குறியீடு செய்து தொகையை பதிவு செய்தவுடன் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களும் வெளியே வந்துவிடுகிறது. இந்த மாணவன் தான் கண்டுபிடித்த இந்த டெமோ இயந்திரத்தை தன்னுடைய பள்ளியில் கொண்டு சென்று இயக்கி காட்டியுள்ளான். அப்போது இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த அவரது ஆசிரியர்களும், சக மாணவர்களும் ராஜசிம்மனை பாராட்டினர். மேலும் இது குறித்து அறிந்த அவருடைய சொந்த ஊர் மக்களும் இந்த இயந்திரத்தையும், அவர் இயந்திரத்தை செயல்படுத்தும் விதத்தையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். இதுகுறித்து அவரது தந்தை ராஜவன்னியன் கூறும்போது என்னுடைய மகன் ராஜசிம்மன் சிறுவயதிலிருந்து விளையாடுவதிலும் ஆர்வமாக இருப்பான். மேலும் விளையாட்டு பொருட்கள் நிறைய வாங்கி அதிலுள்ள பொருட்களை பிரித்து விட்டு மீண்டும் பொருத்தி அதனை இயக்குவான். அடிக்கடி ஏதாவது ஒன்றை கண்டு பிடிக்க வேண்டும் என கூறி வந்தான். அதுபோலவே இந்த இயந்திரத்தையும் அவன் கண்டுபிடித்துள்ளான். அவனது ஆர்வத்தை அறிந்து கொண்ட என் மனைவி பழனியம்மாள் இந்த ஏடிஎம் எந்திரம் உருவாக என் மகனை ஊக்குவித்துள்ளார் எனக் கூறினார். இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவன் ராஜசிம்மன் கூறும்போது தற்போது மினி ஏடிஎம் இயந்திரம் பரிசோதனை முயற்சிக்காக இயக்கி காட்டியுள்ளேன். இந்த இயந்திரத்தில் சில்லரை காசுகள் வரும் வசதி உள்ளது. தற்போது உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் இந்த வசதி கிடையாத. இந்த இயந்திரத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம் ஆகும். மேலும் நிலநடுக்கம் புயல் சூறாவளி மழை வெள்ளம் போன்ற ஆபத்து காலத்தில் உதவும் ரோபோவை அடுத்ததாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஏரோநாட்டிக்கல் படிப்பு படிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாகும். எனக் கூறினான். இது போன்ற மாணவர்களை தமிழகஅரசு கண்டறிந்து அவர்களுக்கென்று சிறப்பான பயிற்சி அளித்து அவர்களுடைய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும், என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
Subscribe to:
Posts (Atom)