கிராமியக் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - -
செண்பகப்பூ கண்ணழகி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
செண்பகப்பூ கண்ணழகி
சிங்கார கொன்டையழகி
குனிந்து நிமிந்து உழைக்கையில
கெண்டைக் காலு தெரியுதடி
நீ உலக்கை குத்தும் சத்தத்துல
மாமன் இதயம் துடிக்குதடி
அம்மி அரைக்கும் அழகுலத்தான்
அத்தான் நெஞ்சம் கொதிக்குதடி
களையறிக்க நீ போனா
கற்கண்டாய் இனிக்குதடி
நடவு நட நீ போனா
நாக்கெல்லாம் வரளுதடி
நீ புல்லுக்கட்டு தூக்கி வர
உன் மாரெல்லாம் நனையுதடி
ஆடு மேய்க்க நீ போனா
காளை மாடா நான் உன்ன சுத்த
செவ்வந்தி பூ கணக்கா
அலுங்கி குலுங்கி நீ போற
தேன் கிண்ண கண்ணம் நீ
கடிச்சித் தின்ன நான் வறட்டா
அட அடிக்கரும்பா இனிக்குறியே
பாவக்காயா மொறைக்கிறியே
பக்கம் வந்தா ஏத்துக்குறேன்
தூரப் போனா நானும் போறேன்
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
வீரா
No comments:
Post a Comment