Friday, 11 January 2019

மாமா

எனக்குப் பிடித்த #மலர்கள்,
மனதை  கொள்ளை கொள்கிறது,
மன இறுக்கமும் லேசாகிறது,
மருமகனும், மருமகளும்
#மாமா என்றழைக்கியிலே!

Wednesday, 2 January 2019

மதிப்பிற்குரிய பெண்மை

மதிப்பிற்குரிய பெண்மை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
தேவியாக தஞ்சமடைந்தவள்,
துணைவியாக ஆணுடன் இணைந்தவள்,
தாயாக கருவை சுமந்தவள்,
தியாகத்தையே கொள்கை என கொண்டவள்.

பெண் அவள் காட்சிபொருளா?
காமத்திற்காக படைக்கப்பட்டவளா?
ஆணுக்கு சேவை புரியும் இயந்திரமா?
இல்லை, இல்லை
அவள் ஒரு இறைவி.

அன்பை காட்டும் போதும்,
பாசத்தை ஊட்டும் போதும்,
உச்சி முகரும் போதும்,
அரவணைக்கும் போதும்,
ஆனந்தத்தை அளிக்கும் போதும்,
வெற்றியின் ஊன்றுகோல் ஆகிவிடுகிறாள்,

சிவனுக்கு ஒரு சக்தி போல
ஆணுக்கு அவள் பெண்ணாகிறாள்,
அவள் தியாகமே உலகத்தின் இயக்கம்.
நாம் தரும் மரியாதையே
பெண்மைக்கான உரிய பரிசு,

காலச்சக்கரம் சுழலும் போதும்,
ஆண்வர்க்கம் அதிகாரம் கொண்ட போதும்,
அமைதியாய் குடும்ப அதிகாரம் நடத்தினாள்,
இன்று நாட்டை ஆளும் அதிகாரத்தையும் பெற்றுவிட்டாள்,

பெண் அவள் அடிமைத்தனத்தை தகர்த்தெறிவோம்,
மதிப்பிற்குரிய பெண்மையே போற்றுவோம்!
=====
அன்புடன் வீரா

விவசாயி நம் உயிர் நாடி

விவசாயி நம் உயிர் நாடி
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
மண்ணைப் பிளந்து,
வேரூன்றி
சூரிய ஒளியை நாடி,
தண்டு முன்னேறி
தண்ணீரின்றி வாடி,
நோய் தாக்கி,
பூச்சி தாக்கி,
பல போராட்டங்களை நடத்தி,
இறுதியில் பூப்பெய்து
தன் சந்ததியை
பூமியில் விதைக்கும்,
விந்தையை செய்யும் தாவரத்தை படைப்பவன் எவனோ ?
அவனே விவசாயி!

கணிப்பொறியால் சாதனை கள் பல படைக்கலாம்,
விதையை படைக்க முடியாது.
விஞ்ஞானத்தால் வித்தைகள் பல செய்யலாம்,
சோறு போட முடியாது.
முகநூலால் முகங்களை மட்டுமே அளவிடலாம்,
முகம் மலர
உணவு படைத்திட முடியாது,
முடியாது என்பதை
முடியும் என்பவனே விவசாயி!

கடவுளால் உயிர்களைப் படைக்க முடியும்,
அந்த உயிருக்கும்
உணவு படைக்கும்
நம் உயிர் நாடி விவசாயி,
இவ்வுலகம் எதை இழந்தாலும்
விவசாயி இருக்கும் வரை
தப்பிப்பிழைக்கும்,
விவசாயத்தை காப்போம்
விவசாயியை போற்றுவோம்!
----- ..... ---------
அன்புடன் வீரா

Tuesday, 1 January 2019

புத்தாண்டு (2019) வாழ்த்துக்கள்

இனிய புத்தாண்டு (2019) வாழ்த்துக்கள்
- - - - - - - - - - - - - - - - - - - - -
இதுவரை ஏனோ என்று வாழ்ந்தது போதும்,
இன்றிலிருந்து லட்சியத்துடன் வாழ்வோம்.
மற்றவரை பார்த்து வாழ்ந்தது
போதும்,
நம்மைப் பார்த்து இனி மற்றவர்கள் வாழட்டும்.
மற்றவர்கள் வளர்ச்சியில் பொறாமைகள் கொண்டது போதும்,
இனி நாம் ஓடும் ஓட்டத்திற்கு
மற்றவர்கள் போட்டி போடட்டும்.
புறம் பேசியே வீழ்ந்தது போதும்,
இனி அறம் பேசி நாம் வாழ்ந்து பார்ப்போம்.
_ _ _ _ _ _ _ _ _ _
அன்புடன் வீரா