அந்தோ ...பரிதாபம்
______________________
அந்தோ செல்லும் மூதாட்டி,
பேர் சொல்ல வாழ்ந்த பாட்டி.
காக்க பிள்ளைகள் உண்டு,
தாலாட்டி சீராட்டி வளர்த்தாள்,
ஆசைகளை துறந்திட்டாள்,
பெற்ற பிள்ளைகளே கெதி என்றாள்,
அதே பிள்ளைகள் தெருவில் விட,
தள்ளாத வயதிலும் கையேந்தவில்லை.
வீராப்பாய் உழைத்தே வாழ்கிறாள்,
பரிதாபத்தில் கண்ணீர் வடிக்கின்றேன்.
--------------------------
அன்புடன்
இல, வீரபாண்டியன்
No comments:
Post a Comment