இரவின் மடியினிலே
------------------------------
நிலா நிலா நீ ஓடி வா
காதலர்கள் அழைக்கின்றோம்,
குமரிக் கடலில் இருந்தே
எழுந்து வா,
முழு மதியாய் ஒளிர்கிறாய்,
இருளை நீக்கியே
நில்லாமல் ஓடி வா ,
கடற்கரை மணலிருக்கு,
கொஞ்சிப் பேசிட அலையிருக்கு,
வெப்பத்தை தணித்திட
இரவின் மடியினிலே
பூமியை சுற்றி வா.
_________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment