Monday, 9 October 2017

நிலவுக்கு நீயே துணையானாள்

நிலவுக்கு நீயே துணையானால்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
நிலவுக்கு நீயே துணையானால்
அந்த நிலவுக் கூட ஒளிர்ந்திடுமே,
வானில் மின்னிடும்
நட்சத்திரக் கூட்டம் பல உண்டு
ஒளி வீசி மின்னிடும் நிலவோ ஒன்று
பூமியில் பெண்கள் பலருண்டு
இருந்தும் நிலவுக்கு ஒப்பானவள் நீ தானே,
மேகக் கூட்டங்கள் மறைத்தப் போதும்,
கருமேகங்கள் சூழ்ந்த போதும்
உன் அழகு போல
நிலவொளி பிரகாசிக்கும் அழகில்
நிலவை ரசிக்கின்றாய் என்றே அறிந்தேன்
அந்த நிலவாய் மாறிப்போனேன்,
தேவலோக தேவி நீ
பூலோக ராணி நீ
உன் அழகில் மயங்கியே,
நிலவாய்  மாறினேன்,
நிலாப்போல காய்கிறேன்,
துணைக்குத் தான் ஆளில்லை,
தூரத்தில் இருந்தே ரசிக்கிறாய்,
திகட்டாமல் பார்க்கிறாய்
நீயில்லாததால் உலகே இருண்டிட
நீ துணையானால் என் காதல் ஒளிருமடி
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment