தீராத ஆசைகள்
----------------------
மழலைக் குழந்தையை கொஞ்சிட வேண்டும்
அதனுடன் சேர்ந்தே தவழ்ந்திட வேண்டும்
உச்சி முகர்ந்து முத்தம்
கொடுத்திட வேண்டும்,
காதலன் கைப்பிடித்தே நடந்திட வேண்டும்,
இரவின் மடியினிலே
தோளோடு தோள் சாய்ந்தே
நிலாக் காயும் வெளிச்சத்திலே
காதல் மொழிகள் பேசிட வேண்டும்,
காதலியே மனைவியாய் வரவேண்டும்,
மழலைச் சத்தங்கள் ஒளிர வேண்டும்,
முத்த சத்தங்கள் சுடர் விட வேண்டும்.
முழுமையான மனிதன் ஆக வேண்டும்,
உலகம் எல்லாம் மதித்திடும் வகையிலே
பெயர்தனை வாங்கிட வேண்டும்,
ராஜ நடையில் நான் உலா வர வேண்டும்,
கவி பட்டங்கள் பல பெற வேண்டும்,
தமிழ் பாமாலை பல படைக்க வேண்டும்
தீராத ஆசைகள் தீர்ந்திட வேண்டும்
கடவுள் எனக்கு அருள் புரிய வேண்டும்
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment