Monday, 9 October 2017

கிணற்றுத் தவளைகள்

கிணற்றுத் தவளைகள்
-----------------------------------
நாகரிக உலகிலே கோமாளிகளின் வேடங்கள் /
தாலியறுந்த மாதர்களுக்கு மறுவாழ்வு
தேவையன்று /
மூடர்கள் சாடினார்களே!/
மேல் சாதி கீழ் சாதி/
பிரிவு எல்லாம் ஒழிந்தும் போக/
சாதி அரசியல் செய்யும் மானிடா /
நீ திருந்துவதற்கு நேரத்தைப் பாரடா /
நல்ல நேரம் கெட்ட நேரம்/
நீயும் பார்த்ததாலே /
பல பெண்கள் முதிர் கன்னியாய் வாழுதடா /
உலகை ஆள்வதும் பெண்ணாயிருக்க /
உன்னைப் பெற்றெடுத்தவளும்
பெண்ணாயிருக்க /
பெண் குழந்தை வேண்டாம் என /
நீயும் கூறுவது ஏனடா /
விலங்குகள் கூட காதல் செய்கிறதே/
புனிதமான மனிதக் காதலை /
ஏற்க மறுப்பது ஏனடா /
கிணற்றுத் தவளையாய் வாழ்ந்தது போதும் /
உலகில் நன்றாய் வாழ்ந்திட வேண்டும்/
எழுந்து வாடா வெளியே நீயும் /
-----------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment