Monday, 9 October 2017

மருத்தும் என்னும் மகத்தும்

1.மருத்துவம் என்னும் மகத்துவம்
--------------------------------
மருத்துவம் என்னும் மகத்துவம் /
நோய்களை நீக்கிடுமே /
நோய் வராமல் தடுத்திடுமே /
சித்தர்கள் கண்ட மருத்துவம் /
பல நோய்களை விரட்டி அடித்ததே!/

சித்தர் வைத்தியமே சித்த வைத்தியம்/
எல்லா மருத்துவத்தின் பிறப்பிடமே /
உணவே மருந்து என்றார் /
சரிவிகித உணவை பரிந்துரைத்தார் /

மூலிகைகள் பல கண்டெடுத்தார் /
மருத்துவக் குறிப்புகள் ஓலைதனில்
எழுதி விட்டார் /
என்ன அதிசயம்
பட்டமும் படிக்கவில்லை /
மருத்துவர் வேலைப் பார்க்கவில்லை /
கடவுளே கெதியென கிடந்தவர்/
ஆயிரம் நோய்களை கண்டிட்டார் /
மருத்துவத்தாலே ஒழித்துவிட்டார் /
ஆங்கில மருந்து பக்க விளைவாம் /
சித்த மருந்தோ பூரண ஆயுளைத் தந்திடுமே!
_ _ _ _ _ _
அன்புன்
இல.வீரபாண்டியன்
_______________________________________________
2.மகத்துவம் கொண்ட ஆசான்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
மகத்துவம் கொண்ட ஆசான் /
எழுத்தை அறிவித்த இறைவன், /
தமிழை பயிற்றுவித்த தாய், /
அறிவைப் புகட்டிய தந்தை, /
மாதா, பிதா, குரு, தெய்வம் என்றார் /
எல்லாம் அவனே ஆசான் என்றேன்./
ஊரான் பிள்ளை என நினைத்ததில்லை,/
ஒவ்வொரு பிள்ளையும்
தன் பிள்ளை என நினைத்திடுவான், /
அவனிடம் மட்டுமே சாதிகள் இல்லை, /
அதனாலே அவனை இறைவன் என்றேன், /
நல்வழிப்படுத்திடும் கலைஞன் அவன், /
எங்கே நம்மை மிஞ்சிடுவான் என்றே, /
எந்தக் கலைஞனும்
கலையை விரைவில் கற்பித்திட மாட்டான், /
ஆசான் என்ற கலைஞன் மட்டும், /
நீ உயரப் பறக்க உயர்த்திடுவான், /
நீ தாழ்ந்தால் அவனையே /
ஊர் கடுஞ்சொற்களால் இகழ்ந்திடுமே/
நீ உயர்ந்தால்
முதலில் பெருமைக் கொள்ளும் ஒரு ஜீவன் /
அவனே உன் ஆசான்/
- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment