இல்லது வாராது, உள்ளது போகாது
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
வினை விதைத்தவன் வினைதனை அறுப்பான்,
பயிரிட்டவன் தானே மகசூலுக்கு அதிபதி
நீ செய்யாத பாவம்
உன்னைச் சேராது,
செய்திட்ட பாவங்கள்
உன்னை விட்டு நீங்காது
முற்பிறவியில் செய்த வினையாயினும்
இப்பிறவியில் அனுபவித்தே ஆக வேண்டும்,
தர்மமதனை நீ செய்தால்
உன் தலையினை காத்திடும்,
அதர்மத்தை செய்திட்டால்
உன் தலையினை கொய்துவிடும்,
வாழ்வது சில பல காலம்,
நல்லதையே செய்திடுவோம்
நன்றாக வாழ்ந்திடுவோம்,
கொலைதனை செய்யக் கூட
உனக்கு உரிமைக் கொடுத்தது யாரடா,
ஆண்டவன் படைத்த உயிரது,
உன் உயிரை நீயே
எடுக்கக் கூட அனுமதி இல்லை,
கொள்ளையாய் அடித்திட்டாய்
உறவுகள் எல்லாம் சுகமாய் வாழ
ஏழைகள் சாபமோ
உன்னை மட்டுமே கேட்குமே,
கற்பையெல்லாம் சூரையாடுபவனே
பாலியல் கொடுமை வேண்டாமே,
பெண் பாவம் உன்னை விடாது,
நீ நல்லவனாய் பிறந்திட்டாய்,
கெட்டவனாய் மாறிவிட்டால்
இல்லது வாராது, உள்ளது போகாது.
____________________________
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
இல்லது வாராது உள்ளது போகாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment