Monday, 9 October 2017

சாபமாகும் வரங்கள்

சாபமாகும் வரங்கள்
-----------------------------
பெற்றவர்களை தெருவில் விட்டோம்,
கட்டியவளை மாளிகையில் வைத்தோம்,
பெற்ற வலிதனை நீயறிந்தால்
கட்டியவள் கட்டாந்தரையினிலே
பெற்றவள் பெருமைதனை கண்டிடுவாள்,
அற்ப சுகம் உனை மயக்கியதாலே,
சிற்றின்பத்திற்கு நீ அடிமையானதாலே
முதுமையை பழித்திட்டாய்,
பெற்ற தாய் தந்தையை ஒதுக்கிட்டாய்,
ஒரு நாள் உனக்கே
நீ வாங்கிய வரங்கள் எல்லாம் சாபமாகும்,
பெற்றோர் ஆசி உனக்குண்டு,
ஆனால் பாவம் உன்னை சேர்ந்திடுமே.
தெருவிலே நீயும் விட்டதாலே
கையேந்தி நிற்க மாட்டார்,
உழைத்தே வாழ்ந்திடுவார்,
இந்த கெதியை நீயும் அனுபவிப்பாய்,
உன் பிள்ளைகளால் வீதிக்கு வருவாய்
இது பெற்றவர் கொடுத்த வரமன்று
இறைவன் வகுத்த நியதியடா !
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment