கண்கள் சுமந்த கனவுகள்
_____________________________
நீயில்லையேல் நான் இல்லையே /
நீ அழுதாலும், நீ சிரித்தாலும் /
உறங்கினாலும், விழித்திருந்தாலும்/
அதுவாக நான் ஆகிடுவேன் /
பாதைதனில் முட்கள் இருந்தால்/
பாதத்தை என் கையில் தாங்கியே /
முட்களை என்னுள் வாங்குவேன் /
கண்ணீர் சிந்திடாமல் காத்திடுவேன் /
புன்னகை மாறாமல் வாழ்ந்திட /
என்றும் துணையிருப்பேன் /
மாது நீ இருக்க /
மது தேவையே இல்லை /
உறுதிக் கொடுத்து கரம் பிடித்தான் /
முப்பது நாள் மோகத்திலே /
அறுபது நாள் ஆசையிலே /
மூழ்கியே கிடந்திட்டான் /
கொடுத்த உறுதியை மீறிட்டான்/
கண்களில் கண்ணீரே சுமையாக /
காலம் முழுவதும்
கண்கள் சுமந்த கனவுகளை /
குழித்தோண்டி புதைத்திட்டான் /
---------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
கண்கள் சுமந்த கனவுகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment