ஆல மரம் சாய்ந்து போனால்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆல மரம் சாய்ந்து போனால்
காக்கை குருவிகள் தங்க இடமேது,
தாய் வீடாய் நினைத்தே வாழ்ந்த மரம்
இல்லாமல் போனால்
தாய் இல்லா பிள்ளைகள் ஆகிடுமே.
குடும்பத்திற்கு மூத்தவர் அப்பா
ஆலமரமாய் கிளை அமைத்தார்,
கோட்டை என்றே நினைத்து
வீட்டினை கட்டிட்டார்.
மனைவியை, பிள்ளைகளை காத்திட
உழைத்து உழைத்தே களைத்துப் போனார்,
குடும்பம் செழிப்பாய் வாழந்திடவே,
தன்னுயிரை கொடுத்தே உழைக்கின்றார்,
தாய் கூட ஒரு பிள்ளையை சுமக்க பத்து மாதம்,
தந்தையோ தன் குடும்பத்தை
ஆயுள் முழுவதும் சுமக்கின்றார்,
குடும்ப தலைவனாய் கடமையை செய்திடுவார்,
மனைவிக்கு நல்ல கணவனாய்,
பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாய்,
நாட்டிற்கு நல்ல குடிமகனாய் விளங்கிடுவார்,
அவர் ஆல மரமாய் சாய்ந்திட்டால்,
உலகமே போற்றிடும்
அவர் குடும்பமே வீழ்ந்திடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment