வெட்கமென்ன பெண்ணிலவே!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
பிரம்மன் வடித்த சிற்பமே,
வெட்கம் கொள்வது ஏனடியோ,
பெண் மனதை அறிவது கடினமோ,
உன் நாணத்தின் காரணம் என்னடியோ,
கண்ணாடி முன் நிற்கிறாய்
கண்ணாடி உற்று உற்று பார்க்கிறதே,
உன் அழகை நீ ரசிப்பதாய் நினைக்கிறாய்,
உந்தன் அழகை அதுவல்லவோ ரசித்திடுது,
பூக்களை நீயும் பறிக்கிறாய்
இஷ்டப்பட்டே மலர்கள்
தான் செய்த பாக்கியம் என்றே
உயிரையும்
உனக்கெனவே விடுகிறதே,
பூஞ்சோலையில் நீ புகுந்தாய்,
நாமே அழகென நினைத்த மலர்களோ
வெட்கி தலைக்குனியுதடி,
நீ வெட்கப்பட்டு சிரிப்பதை,
காண கண் கோடி வேண்டுமடி,
மலர்களை சுற்றிய வண்டுகளோ
தேனெடுக்க மறந்ததடி
உன் கூந்தலை சுற்றி வந்தே
உயிரையுமே விட்டதடி,
தவழும் என் தேவதையே
நான் மட்டும் உன்னை
பார்க்கையிலே
வெட்கமென்ன பெண்ணிலவே.
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment