இரவின் மடியில்
-------------------------
தாய்தனை பார்த்தாயோ
மழலைகளை கண்டாயோ
குளிக்கும் அழகும் என்னே!
முன்னே நிற்கும் குழந்தையோ
தமக்கைக்கு விளையாட்டு காட்டுதய்யா,
செல்லமாய் தாய் கொஞ்ச
மழலையாய் குழந்தை சிரித்து பேசுதய்யா
இயற்கையும் நேசம் விரித்திடும்
குழந்தையின் அன்புக்கு
மாதாவின் அன்புக்கு
வையகமும் கட்டுப்படும்
அந்த வானமும் வசப்படுமே
- - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment