விழியே கதை எழுது
- - - - - - - - - - - - - - - - - - - - - -
கண்கள் இருந்தால் உலகை பார்க்கலாம்,
காதுகள் இருந்தால் மழலைச்சொல் கூட கேட்கலாம்,
விழிகள் தானே கதைகளை எழுதத் துண்டும்
ஐம்புலன்களையும் தட்டியெழுப்பும் விழியே!
அவளின் விழியினால் கவர்ந்தேன்,
கவிதைக்கூட எழுதினேன்'
செவ்விதழ் சிவக்கும் சிங்காரியே,
உன்நடை அழகு அளக்கும்,
என்விழியினில் கவிதாயி நீயே.
சேற்றில் பூத்த செந்தாமரை நீ
குப்பையில் தோன்றிய காளான் நான்
அவ்வளவே நம் சாதியுமே!
யார்விழி பட்டதோ
விதி கூட விளையாடி விட்டது.
பிறப்பும் இறப்பும் இயற்கை
உன் விழியும் என் விழியும் சந்தித்த வேளை
என்கைகள் விளையாடியது
உன்னை வர்ணிக்க - இது செயற்கை.
சாதியபிரிவுகள் நம்மை பிரிக்கலாம்
எதுகையும் மோனையும் போல!
விழிகள் எழுதிய கதையினால்,
மனம் இரண்டால் ஒன்றுபட்டோம்
சந்தியும் சாரியை போல
வாழ்ந்திடுவோம், வீறு கொண்டு
எழுந்திடுவோம்,
புதுவழியில் விழிகளாய்
இணைந்திடுவோம்.
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
விழியே கதை எழுது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment