இரவின் மடியினிலே
-----------------------------
உடலில் ஊனத்தை கொடுத்தவனே
மனதில் உறுதியை கொடுத்தான்,
ஊனம் அது உடலில் இல்லை
மற்றவர் பார்வைக்கே அது ஊனம்
உனக்கு அது ஓர் தன்னம்பிக்கை
முயற்சி ஒன்றையே துணையாய் கொண்டு
கையேந்தி வாழ்ந்ததில்லை,
அனுதாபமும் தேவையில்லை,
உழைத்தே வாழ்கின்றோம்
நிம்மதியாய் உறங்கினோம்
இரவின் மடியினிலே!
- - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment