Monday, 9 October 2017

கிராமத்து பூங்குயிலே

கிராமத்து பூங்குயிலே
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
கிராம கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஆ:கிராமத்து பூங்குயிலே
  பூஞ்சோலையில என்ன வேலை
  பூக்களெல்லாம் நானிட
அலுங்கி குலுங்கி வருவதேனடி

பெ: அட கருத்த மச்சான பாக்கத்தானே
       குடம் எடுத்து வந்தேன் நானே
      நிறைகுடத்த ஊத்திப்புட்டேன்
      தண்ணி எடுக்கும் சாக்கு வச்சி
    உன்ன பாக்க வந்தேன் நானே

ஆ: ஆச உன் மேல இல்லடி புள்ள
     பாசம் வைக்க எனக்கு தெரியாதடி
      முரட்டுக் காளை நானடி புள்ளே
      என்னை அடக்க முடியாதடி
      முரண்டுப் பிடிச்சா சேதாரம் ஆகி        போகுமடி

பெ: களத்தில் இறங்கி பார்த்திடலாம்
     என் கூந்தலுக்கு நீயும் அடிமையய்யா
      புடவை விலகி பார்த்துப் புட்டா
      தானா அடங்கி போவியே மாமா
      காளையை அடக்க நானிருக்கேன்
     என்னை அடக்கிட முடியுமா மாமா

ஆ: அடி உசுப்பேத்தி பார்க்காதடி
      மாமன் விளையாட்ட பார்த்ததில்லே
       ஒரு முறை என்னுடன் விளையாடடி
      மாமனுக்கு நீயும் அடிமையடி
  
பெ: அட அதையுமே பார்த்திடலாம்
       மாரியாத்தா கோவிலுக்கு வந்திடய்யா
     பரிசம் போட காத்திருக்கேன்
     தாலிக் கட்டிட்டு நீயும் விளையாடய்யா
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment