ஆண்மையின் தாய்மை
- - - - - - - - - - - - - - - - - - - -
பெண் அவள் பத்து மாதமே சுமந்திடுவாள்
தன் பிள்ளையை ஈன்றெடுப்பாள்,
தாயும், சேயும் நலமாய் இருக்க
போராடிடும் குணம் உள்ளவனே ஆண் மகன்
ஆயுள் முழுவதும் குடும்பத்தை சுமப்பான்
வியர்வை ரத்தமாய் சிந்த உழைத்திடுவான்,
மனைவி, மக்கள் சுகமே
தன் சுகமாய் நினைத்திடுவான்,
அதனாலே அவனுக்கு
இறைவன் பிரசவ வலியை தந்ததில்லை.
தாய், தந்தையை வணங்கினான்,
மனைவியை போற்றினான்
தன் மக்களை காக்கவே உழைக்கின்றான்,
பிறந்தது முதல்
மண்ணிலே மட்குவது வரையிலே
தன் குடும்பத்தை சுமையாய் சுமப்பவன்,
சுகமான சுமையாய் நினைத்திடுவான்,
தாயை கடவுளாய் போற்றும் மனம்
மனைவியை முதல் குழந்தையாய் பாவிக்கும் உள்ளம்
குழந்தைகளை
அன்பாய் உருகி கொஞ்சிடும் நெஞ்சம்
பெண்ணிடம் மட்டுமே கேட்டுப்பார்
தெரியும் ஆண்மையின் தாய்மை அப்பொழுது
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment