Monday, 9 October 2017

கையால அரைச்ச மணம் போகலையே

கையால அரைச்ச மணம் போகலையே
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
கையால அரைச்ச மணம் போகலையே
என் ஆத்தா வச்ச மீன் குழம்பு
வாசம் வீட்ட விட்டு போகலையே
அம்மிக்கல்லு சத்தம்
இரண்டு தெருவ தாண்டிக் கேட்கும்,
மிளகு, சீரகம் வாசம்
நான்கு தெருவ தாண்டித் தூக்கும்,

பருவ சிட்டுக்களோ
எட்டி வந்து பார்க்கும்
எனக்கோ நாணமோ எட்டிப் பார்க்கும்
ஆத்தா அம்மிக் கல்லுல வச்சி அரைச்சா
போகாத சோறும் உள்ளே போகும்
நோகாத நோயும் வெளியே போகும்,
பசியெல்லாம் நல்லா எடுக்கும்.

அய்யோ அம்மிக்கல்ல காணலையே
அம்மி சத்தமும் கேட்கலையே
ட்ரு ட்ரு சத்தம்
திடீர் திடீர்னு கேட்கும்
என்னவென்று பார்த்தால்
வீட்டில் மின் சாதனம் சுத்தும்,

ஒரு ருசியும் இல்லையே
அட மணம் கூட வரவில்லையே
மீன் குழம்பு வச்சிப்புட்டா மனைவி
உப்பில்ல சப்பில்ல கிழவி
அம்மிக்கல்லு போல வருமா
அங்கே நீ கையால அரைச்ச
மணம் போல வருமா,
வயிறும் அப்போ நிறையுமா.
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment