காட்சியும் கானமும்
_ _ _ _-_-_-_-_-_-_-_-_-_
கண்ணே,
கரிசல் காட்டுப் பூவே,
நித்தம் உன்னையே நினைக்கின்றேன்,
நிலவே
தேவர் நாட்டு மலரே
தினமும் உன்னையே பூஜிக்கின்றேன்,
மானே
மானமுள்ள ரோசாப் பூவே
உன்னை ரசிக்க வந்தேன்,
முட்களால் தீண்டினாய்,
இரத்தமாய் வடிகிறதே,
மயிலே
மலை நாட்டின் குறிஞ்சியே
தினசரி உன் நினைவே
கனவாய் ஆனதடி,
குயிலே
குபேரன் பெற்ற தங்க நிறத்தவளே,
ஒரு நாள் தவறவில்லை,
உன் பெயரை நான் மறக்கவில்லை,
நாணம் கொண்ட
திருஞான சுந்தரியே,
உன்னை மறந்தால்
நொடிப் பொழுதில் இறப்பேனடி,
கார்முகிலே
காட்டாற்று வெள்ளமாய்
உன்மீது காதல் வந்ததடி,
என் மீது காதல் கொள்வாயடி,
_________________----
அன்புடன்
இல.வீரபாண்டியன்
Monday, 9 October 2017
காட்சியும் கானமும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment