காட்டுப் பூ பூத்திருக்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - -
கு:காட்டுப் பூ பூத்திருக்கு
ஏலேலங் கிளியே,
தை மாசம் பிறந்துடிச்சி
ஏலேலங் கிளியே
ஆ : காட்டுப் பூ பூத்திருக்கு
கன்னமெல்லாம் உப்பியிருக்கு
ஆசை வைத்த அக்கா மகளே
சவுக்கியமா,
பெ: கருத்த மச்சானே
நான் சவுக்கியம் மச்சானே,
நானும் தானே ஆசை வச்சேனே
என் அத்த மகனே
தை மாசம் பிறந்துடுச்சே
நான் பூத்து பல நாளேச்சே
சொன்ன வார்த்தை என்ன ஆச்சு
ஆ: அவசரப்பட்டா ஆகுமா
நாளுங் கிழமை வேண்டாமா,
பெரியோர் பார்த்துப் பேசனும்
வெத்தலப் பாக்கு மாத்தனும்
டும் டும் கொட்டனும்
நான் பூத்த மலர பாக்கனும்
இரவு பூஜையில் வைத்தே பூஜிக்கனும்
பெ: அய்யோ அய்யோ மாமனே
நினச்சாலே இனிக்குது
தாவணிக் கூட நழுவதே
தேகமெல்லாம் ஊருதே
பூஜை எப்போ ஆரம்பம்
நானும் தயாராகனும்,
ஆ: முந்திக் கொள்ளும்
முந்தரிக்கொட்டை நீயடி,
எனக்கும் வேட்டி விலகுது,
தேகம் கூட சூடாகுது
பொறுத்திருக்க வேண்டுமடி
பெ: பூ மலர்ந்து நாளாச்சு
நீ கவனிச்சு பல நாளாச்சு
பொறுத்திருந்தா ஆகாது,
பூ வாடி போகுமய்யா,
ஏக்கம் கொள்ள வைக்காதய்யா,
ஆ: ஏக்கம் கொள்ள வேண்டாமடி
கல்யாணம் கட்டிக்கலாம்,
பூஜையில பூஜிக்கலாம்,
மலைக் கோயில் பக்கம் வாடி
தாலிக் கூட கட்டிடுவேன்
சந்தோஷமா வாழ்ந்திடலாம்
காட்டுப் பூவே வாடிப்புள்ள
கு:காட்டுப் பூ பூத்திருக்கு
ஏலேலங் கிளியே,
தை மாசம் பிறந்துடிச்சி
ஏலேலங் கிளியே
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல. வீரபாண்டியன்
No comments:
Post a Comment