சிறகு முளைக்காத ஆயுதம்
--------------------------------------------
பிறந்து விட்டோம் இந்த உலகில்
இழந்து விட்டோம் மன நிம்மதியை
துயில் எழுந்தோம் தூக்கமே இல்லாமல்
என்ன நடக்குமோ நித்திரையில்
ஏதும் அறியாக் குழந்தையும் தப்பவில்லை
எல்லாம் அறிந்த மாதும் தப்ப முடியவில்லை
உலகம் நிலையால் செல்கிறதா
மனிதத்தை தொலைத்தே வளர்கிறதா
வளர்ந்தும் நிலவாய் ஒளிரலையே
ஓரினச் சேர்க்கை என்றான் ஒரு புறம்
குழந்தை பாலியல் என்றான் மறுபுறம்
மாதுக் கடத்தல் என்றான் தென்புறம்
விரும்பியே நடக்குது அது அந்தப் புறம்
சடுகுடு ஆட்டமெல்லாம் நடக்குது
கத்திச் சண்டையில் கொலையும் நடக்குது
கழுத்து முனையில் கொள்ளையும் நடக்குது
தீவிரவாதமோ தலை விரித்தாடுது
ஆயுதம் உயிர் தாங்கி வந்தால்
சிறகுகள் ஏந்தி பறந்து வந்தால்
மனிதம் தானாய் கிடைத்துவிடும்
மனிதநேயமோ உலகில் பரவி விடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment