எனக்குள் நீ
- - - - - - - - - - - - - - -
எனக்குள் நீயென்றே உனக்குள் நானென்றே
நித்தம் நித்தம் நினைக்கின்றேன்
நினைக்காமல் செல்வது ஏனடி
உறங்காமல் தவிக்கின்றேன்
உறக்கத்தை கலைத்தது ஏனடி
தூங்கியவனை தட்டி எழுப்பினாய்
காதல் என்ற பெயராலே
சோம்பேறியாய் இருந்தேனே
எறும்பாக மாற்றினாயே
இரும்புப் போல நான் இருந்தேன்
உருக்கி என்னை கவிழ்த்தாயே
உருவம் அற்றும் இருந்தேனே
அருஉருவமாய் என்னுள் வந்தாய்
இதயத்திலே நங்கூரமிட்டாய்
ரத்தத்தை சூடேற்றுகிறாய்
தென்றல் வாங்க சென்றேன்
சுவாசமாய் என்னுள் சென்றாய்
தெம்மாங்கு பாடி வந்தேன்
எனக்குள் இருந்தே சுரமாய் வாசித்தாய்
வீணையெல்லாம் தேவை இல்லை
நீ மட்டும் இருந்தால் போதும்
கலைவாணி நாவில் குடியேறுவாள்
எனக்குள் நீ இருப்பதாலே
காதல் கிறுக்கன் நான் ஆனேன்
கவிதையாய் எழுதுகிறேன்
சிந்தையில் இருந்தே தூண்டுகிறாய்
சிந்தாமல் பா வடித்தேன்
பாட்டாய் நான் பாடிவந்தேன்
-------------------------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment