காட்சிக் கவிச்சோலை -
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்பை பறித்தாய்
உள்ளத்தை களவாடினாய்
உயிராய் இருந்தாய்
பாசத்தை பொழிந்தாய்
உணர்வை மதித்தாய்
உள்ளங்கையில் தாங்கினாய்
மானே என்றாய்
தேனே எனக் கொஞ்சினாய்
மலரே என முகர்ந்தாய்
அமிர்தமே என பிதற்றினாய்
கனவிலும் உளறினாய்
நினைவிலும் தானாய் பேசினாய்
பூக்களை சூடினாய்
உச்சி முகர்ந்தாய்
காமத்தை கிளறினாய்
காதலின் உச்சத்தை அடைந்தாய்
மலரானவளை காலில் மிதித்தாய்
வாடிய மலரையும் நோகடித்தாய்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment