Thursday, 22 June 2017

அம்மா வைத்த குழம்பு

அம்மா வைத்த குழம்பு
- - - - - - - - - - - - - - - - - -
அம்மா வைத்த குழம்பு மணக்குமே
கையால் அரைத்த மணம் கமக்குமே
நாட்டுக் கோழி உலா வந்திடுமே
திடீர் என குழம்பில் வெந்திடுமே

வேகும் போதே நாக்கில் எச்சில் ஊறிடுமே
ஊரையே சுண்டி இழுத்திடுமே
இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம்
அம்மியில் அரைத்தே
குழம்பில் கலந்தாலே வாசம் வீசுமே
நன்றாய் உண்டிடலாமே

அம்மா வைத்த மீன் குழம்பு
வயிறு முட்ட உண்ணலாம்
வறுத்து வைத்த கருவாடு
பிடி பிடி என பிடிக்கலாம்
கவலை மறந்தே தூங்கலாம்
அம்மாவின் கை பக்குவம்
உணவு விடுதியிலும் கிடைக்காது
நட்சத்திர விடுதியிலே
தேடினாலும் சுவை தெரியாது

ஆத்தா வைத்த குழம்பு
அறுசுவையாய் இனித்திடும்
ஆயுளை கூட கூட்டிடும்
நோயெல்லாம் பறந்தோடும்
நாக்கில் மட்டும் ருசி கூடும்
மனைவி கையால் சாப்பிடும் போதே
அம்மா வைத்த குழம்பின் அருமை தெரியும்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment