தவளைதான் தப்புமோ
வாயைத்தான் மூடுமோ
ஆபத்து வரும் போதே
எழுப்பியதே சத்தமே
எதிரியின் உணவுக்கு
தவளை இரையானதே
மனிதனின் வாழ்வும்
இங்கே இப்படித்தான் நடக்கின்றது
மனிதனின் வாயும்
முதலை போல திறக்கின்றது
ஆபத்தை விலைக் கொடுத்தே
வாங்குகின்றது
வாழ்வாங்கு வாழ்ந்தவரெல்லாம்
நுணல் போல வாயாலே கெட்டனர்
தீண்டும் நாக்கால்
தீதினை நினைத்தாலே
தீவினைகள் சேரும்
அதனை அறியவில்லையோ
நல்லது செய்ய முடியவில்லை
தீங்காவது செய்யாமல் இருக்கலாம்
மனம் நினைத்தாலும்
வாய் கேட்கலையே
எதிரியின் பலத்தை அறிந்திடு
அதன் பின்னே அவனுடன் மோதிவிடு
வெறும் வாய்ச்சவடால் விடுவதால்
பயன் ஏது
இடம் பொருள், ஏவல் அறிந்துவிடு
செய்யும் செயலை தொடங்கிவிடு
நிதானத்துடன் செயல்படு
எதிரியை நீயும் ஓடவிடு
-------------------
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment