கல்லறையின் மீது சபதம் - - - - - -
- - - - - சிறைக்குப் போகிறேன்
---------------------------------------------------
கல்லறையின் மீது சபதம்
உன் உயிரின் மீது சத்தியம்
உன் உடல் சிதைவதற்குள்
உன் ஆவி அடங்குவதற்குள்
எடுத்த சபதம் முடிப்பேன்
அதுவரை நான் உயிரோடிருப்பேன்
உள்ளத்தை நேசித்தோம்
உயிராய் இருந்தோம்
மலர்களை போல மலர்ந்திருந்தோம்
மலரே உன்னை வாடச் செய்தவன் யாரோ
நீ உறங்கச் சென்றதேனோ
என்னை விட்டு பிரிந்ததேனோ
ஜோடி உயிர்களாய் இருந்தோம்
ஒரு உயிரை பிரித்த இறைவா
மற்றொரு உயிர்
வாடுவதை அறியவில்லையா
உன் மனம் நோகவில்லையா
நெஞ்சத்தை உடைத்தவன் எவனோ
இதயத்தைக் கிழித்தவன் எவனோ
அவன் தந்தையே ஆகினும்
உன் உறவாகவே இருந்தாலும்
உயிரோடு இருக்கப் போவதும் இல்லை
அவன் உயிரை எடுப்பேன்
உன் ஆத்மா சாந்தியடையவே
நான் சிறைக்குப் போகிறேன்
-----------------.- - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment