இலக்கணத்தில் வல்லினம் காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீ ஏதும்
எடுத்தாள வார்த்தைகளை தேடுகின்றேன்
உன்னிடமே பெறுகின்றேன்
இலக்கணத்தை கற்கின்றேன்
வல்லினப் பெண்ணே
மெல்லின மணமே
இடையின நடையே
உனையே வர்ணித்தேன்
ஒற்று பிழைகளைத் தவற விட்டேன்
பரிசுகளை இழந்து விட்டேன்
ஆழ்ந்து படிக்கின்றேன்
உன்னாலே தமிழை வாசிக்கின்றேன்
என் மொழியை சுவாசிக்கின்றேன்
இருந்தும் தவறுவது ஏனோ
ஆழ்ந்த பிடிப்பில்லையா
ஆர்வம் இருந்தும்
கவி வடிக்க தெரியவில்லையா
இலக்கணம் தெரியாமல்
உனை தரிசிக்கின்றேனா
தட்டச்சுப் பிழைகளா
எங்கே தவற விட்டேன்
வல்லினம் தவறியதே
தலை இங்கே துண்டானதே
முண்டம் இருந்து என்ன பயனோ
தேடுகின்றேன் உன்னிடத்திலே
உனைச் சுற்றியே வருகின்றேன்
களவாடியதை கொடுத்துவிடு
பாமாலை இயற்றிடுவேன்
உனக்கே சூடிடுவேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல. வீரபாண்டியன்
No comments:
Post a Comment