வளரும் செடிகள்
வளமாகும் வாழ்வு
- - - - - - - - - - - - - - - - - - -
உயிர் வாழ காட்டை அழித்தோம்
உயிர் வாயு இன்றி திண்டாடுகிறோம்
கட்டிடங்கள் கட்ட மரத்தை அழித்தோம்
நிழல்கள் இன்றி வாடுகிறோம்
தொழிற்ச்சாலைகள் கட்ட செடிகளைக் கூட
அழித்திட்டோம்
வேலையில்லாமல் திண்டாடுகின்றோம்
குளிர் சாதன வசதிகளை செய்தோம்
செயற்கை காற்றில் சுகமாய் இருந்தோம்
வனத்தை அழித்து இயற்கையை துறந்தோம்
விலை மதிப்பற்ற உயிர்களை இழந்தோம்
மரம், செடிகள் புதையுண்டே
பொக்கிஷமாய் மாறியதை கண்டோம்
பூமியை சுரங்கமாக்கி களவாடினோம்
பொங்கி வந்த நிலத்தடி நீர்
கானல் நீராய் ஆக்கிவிட்டோம்
மும்மாரி பொழிந்த மழையை
தடுத்து நிறுத்திட்டோம்
இயற்கை வாயு மறைந்து
செயற்கை வாயு ஓசோனில் தஞ்சமடைய
ஓசோன் ஓட்டை விரிவடைய
புற ஊதாக் கதிர்கள் நேராய்
பூமியை தாக்க
உலகில் வெப்பமயம் என்றோம்
தீங்குகளை தடுக்க
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றோம்
அதையும் கிடப்பில் போட்டோம்
வளரும் செடிகளால் தான்
நம் வாழ்வும் வளமாகும்
அழிந்த வனத்தை மீட்போம்
உலகில் நன்றாய் வாழ்ந்திடுவோம்
--------------------------.
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment