தொல்லையென்றால்
தொலைந்து விடுகின்றேன்
---------------------------------------------
உன் அழகை நான் நேசிக்கவில்லை
மனதை மட்டுமே நேசித்தேன்
உன் மீது அன்பை மட்டுமே பொழிந்தேன்
காமத்தை நான் எதிர்பார்க்கவில்லை
உன் உடலை நான் விரும்பவில்லை
இதயத்தில் குடியிருக்கவே விரும்பினேன்
உன் உயிரை எடுக்க நான் வரவில்லை
உன்னை இமையாய் காத்திடவே நான் வந்தேன்
தினம் தினம் உன்னை நினைக்கின்றேன்
கருவாய் உன்னை சுமக்கின்றேன்
உயிராய் நான் காக்கின்றேன்
அதிலே உறுதியாய் நிற்கின்றேன்
கண்டும் காணாமலும் செல்கிறாய்
கடுஞ்சொற்களால் இகழ்கின்றாய்
தொல்லையென்று நினைத்தாயோ
ஒரு துளி விஷம் கொடுத்துவிடு
உண்டு விட்டு தொலைந்து விடுகின்றேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment