காலமெனும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - -
பிறந்தபோது சிரஞ்சீவி
பிறந்தப் பின்னே எல்லாம் வேலி
ஆணாய் பிறந்தால் ஆதிக்கம்
பெண்ணாய் பிறந்தால் அடிமை
ஆணுக்கு அமுது
பெண்ணுக்கு நஞ்சு
ஆடு பெண்குட்டி ஈன்றால் மகிழ்ந்தார்கள்
பெண் பிறந்தாலே
கள்ளிப்பால் ஊட்டினார்கள்
பெண்ணே பெண் குழந்தையை
கொன்ற கொடூரம்
தப்பிப் பிழைத்த பெண்கள்
சுகமாய் வாழ்ந்தார்களா,
அய்யகோ! கூண்டுக் கிளிகளாக அடைப் பட்டுக்கிடந்தனரே
அடுப்பூதியே காலத்தை கழித்தார்களே
வீதியில் விளையாட
சிரித்து மகிழ்ந்திட
ஆடவனுடன் பேச
எண்ணிலடங்காத் தடைகள்
கொடுமையென்றால் கொடுமை
கணவன் இறந்தால்
பெண்ணும் இறக்க வேண்டும்
எழுதப்படாத நியதி
தப்பிப் பிழைத்த பெண்கள்
மூதாட்டிகளாய் இன்றும் வாழ்கிறார்கள்
எழுதி வாசிக்கின்றார்கள்
மீண்டும் திரும்புகிறதோ
காலமெனும் கவிதை
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment