முதன் முதலாக அம்மாவுக்கு
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
ஒரு துளி உதிரத்தை உள்வாங்கினாய்
உன் பிள்ளையாய் நான் பிறந்தேன்
நீ செய்த தவமோ
நான் பெற்ற வரமோ
உனக்கு பிள்ளையாய் பிறந்திட்டேன்
நீயும் உச்சி முகர்ந்திட்டாய்
நீ தந்த முதல் முத்தம்
தாலாட்டி சீராட்டி வளர்த்த அன்பு
நிலவைக் காட்டி
பாசமாய் ஊட்டிய சோறு
அன்பான கண்டிப்பு
கண்டித்ததும் உன் கண்ணில் கண்ணீர்
நான் மறப்பேனா
முதன் முதலாக அம்மா என்றழைத்தேன்
உன் முகத்தில் தாய்மையை கண்டேன்
நீயோ எனை தெய்வம் என்றாய்
நானோ உன்னை வணங்குகிறேன்
அன்னையே என் அறிவுக்கண்களை
திறந்திட்டாய்
அன்பின் ஊற்றை பெருக்கிட்டாய்
வளர்த்து விட்டாய்
படிக்க வைத்தாய்
நல்வாழ்க்கையை தந்து விட்டாய்
பாதை தவறாமல் நல்லவனாய் எனை
படைத்து விட்டாய்
நன்றி எப்படிச் சொல்வேன்
உறுதியாய் நம்புகிறேன்
நீ முதியோர் இல்லத்தை நாடாமல் காப்பேன்
-----------------------------.- - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment