விழிகள் மோதி பேசும் மொழிகள்
---------------------------------------------------------
கண்ணும் கண்ணும் பேசியே
காதல் செய்தது
மனமும் மனமும் பேசியே
அன்பை பொழிந்தது
ஆன்மா இரண்டு இணைய
இரு உடல் ஓருடலாகி
பஞ்ச பூதங்களும் அடங்கிட
அன்பை சொரிந்து
காதலை வளர்த்து
விழிகள் மோதி மொழிகளை
மௌனமாய் பேசிடும் காதல்
தொட்டும் தொடாமலும்
உரசியும் உரசாமலும்
சிரித்தும் சிரிக்காமலும்
புன்னகை மட்டும் ததும்பியே
பூதங்களை அடக்கிடும் காதல்
உணர்ச்சிகள் பெருகிடும்
உணர்வுகளை அடக்கிடும்
அத்துமீறல்களை உடைத்திடும்
காமத்திற்கு வேலியாய்
அன்பிற்கு மட்டுமே அடைக்கலமாய்
வாழ்ந்திட வாழ்த்தும் காதல்
உண்மையாய் நினைத்து
உறுதியாய் நின்று
உள்ளத்தில் நிறுத்தி
எதிர்ப்பை மீறி
கரை சேர்ந்திடும்
இல்லையேல் உயிரை வாங்கியே
உயிர் வாழ்ந்திடும் உண்மை காதல்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment