Thursday, 22 June 2017

கிராமத்து உணவு

கிராமத்து உணவு
- - - - - - - - - - - - - - - - -
பூ போன்ற இட்லியும்
அம்மியில் அரைத்த சாந்தும்
தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை
தேங்காய் பால் மணமும் வரவில்லை

அரிசிக்கொழுக்கட்டை
இலையில் வைத்தே வேகவிட்டு
உண்டு விட்டால்
தேவையான சத்துக்கள்
தானாய் கிடைத்திடும்

கம்பு, கேழ்வரகை
உரலில் குத்தியே
வேக விட்டு கூழெடுத்து
கூழிலே முருங்கைக்கீரை குழம்பு கலந்து
உண்ட ருசி எங்கும் கிடைக்காது

பசும்பால் சுட சுட கரந்து
பாலை சூடேற்றி
ஆத்தா கொடுத்திடுவாள்
இனிமையான ருசியது

மீன் குழம்பு மணம் வீசும்
மறுநாள் உண்டால் மணமாய் மணக்கும்
உப்புக் கருவாடு வருவல்
வாசமுடன் உள்ளேப் போகும்
பசுந்தயிரை அதனுடன் உண்டால்
செரிமான பிரச்சினையோ பறக்கும்

கிராமத்து உணவது
என்றும் நிலைத்திடும்
ஆரோக்கிய வாழ்வை தரும்
நகரத்து உணவெல்லாம்
உடலை வேக வைக்கும்
குடலை புண்ணாக்கும்
எந்த நாகரிகம் வளர்ந்தாலும் (வந்தாலும்)
கிராமத்து உணவுக்கு ஈடாகுமா!
- - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment