Thursday, 22 June 2017

தவம் இன்றி கிடைத்த வரம்

தவம் இன்றி கிடைத்த வரம்
- - - - - - - - - - - - - - - - - - -

தவம் இன்றி கிடைத்த வரம்
நான் உனக்கு மகனாய் பிறந்த வரம்,
பூ போல போர்த்தியே,
சீராட்டி வளர்த்தத் தாயே!
உன்னாளே இந்த உலகம் என்னை
பார்த்தது, என் மாதாவே!

தாயும் ஆனதால் தந்தை அவர்
உதிரத்தின் மிச்சம் நான்,
பிரம்மாவின் மச்சம் அவர்,
உலகில் எனக்கு வழிகாட்டும் பிதா அவர்.

நல்லறிவை புகட்டி,
உலக நடப்பை புகுத்தி,
என்னை நல்வழிப்படுத்தி,
தரமான படைப்பாக படைத்திட்ட,
குருவும் வரம் இன்றி கிடைத்திட்ட வரம்,

மாதா பிதா குருவை அருளிய,
நல்ல மனைவியை தந்தருளிய,
எந்நாளும் குறை - நிறைகளை கலந்தருளிய
இன்பம் துன்பம் பகுத்தருளிய,
என் தெய்வம் தந்த வரமெல்லாம்,
எனக்கு தவம் இன்றி கிடைத்த வரம்,
                          அன்புடன் உன்னாலே
     விருத்தாசலம் இல.வீரபாண்டியன்





No comments:

Post a Comment