Thursday, 22 June 2017

பச்சோந்தி

பச்சோந்தி
- - - - - - - - - - - - - -
பாவப்பட்ட மனிதா
உனக்கு இந்தப் பிறவி தேவைதானா
ஒரு முறைதான் அவதாரம் எடுக்கிறாய் மனிதனாய்
அதற்கே ஏன் இந்த வேடமிடுகிறாய்
நடிப்பதே நமது வேலை
மிகையான நடிப்பு தேவைதானா
காரியம் ஆக காலைப் பிடிக்கிறாய்
ஆனப்பின்பே காலை வாருகிறாய்
தர்மத்தை மீறுகிறாய்
தீவினைகள் செய்கிறாய்
தட்டிக் கேட்கும் கடவுளோ சிலையில்
திருத்த நினைத்த
மாதாவோ முதியோர் இல்லத்தில்
பச்சோந்தி நிறம் மாறும்
உயிர் வாழ மட்டுமே
நீயோ நாடகமாடுகிறாய்
மற்றவரை அழிக்க
உன் நாக்கு பலதை பேச
ஒன்றும் நிலையில்லையே
கலவரமே அதன் மிச்சமாக
நிறம் மாறும் மனிதா
அதர்மம் செய்தே வாழ்ந்தது போதும்
இருக்கும் வரை நல்லதே செய்திடு
இறந்த பின்பே வரலாறு பேசிடும்
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்

No comments:

Post a Comment