ஆசையோடு வருகிறாய்
நேசமாக மலர்கிறேன்
--------------------------------------
ஆசையோடு வருகிறாய்
நேசமாக மலர்கிறேன்
இனிய தருணங்களில்
இன்ப மழை பொழிகிறேன்
மழையில் நனைகிறேன்
மயிலாட்டம் ஆடுகிறாய்
வெய்யலில் அலைகிறேன்
மான் போல ஓடுகிறாய்
துன்பத்தில் உழல்கின்றேன்
இன்பமாய் வருகிறாய்
வறுமையில் திண்டாடினேன்
பசுமையாய் அழைக்கின்றாய்
காதல் நோயால் நோகினேன்
மருந்தாய் நீ வருகின்றாய்
கீதம் நான் இசைக்கின்றேன்
இசையாய் நீ மீட்கின்றாய்
மனதில் வைத்து காக்கின்றேன்
தேவதையாய் வருகின்றாய்
மலராய் நீ வருகின்றாய்
உன் மன்னவனாய் நான் ஆகின்றேன்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment