மகிழ்வான தருணங்கள்
-----------------------------------
தாய் அன்பாய் அரவணைக்கும்,
தந்தை உச்சி முகர்ந்திடும்,
தாத்தா பாட்டி மகிழ்வாய் கொஞ்சிடும்,
தாய்மாமன் மடியில் அமர்ந்திடும்
தருணங்கள் மீண்டும் கிடைக்காது
அது ஒரு மகிழ்வான தருணங்கள்
கவலை தெரியாத குழந்தைப் பருவம்
மண்ணில் விளையாடும் மாணவப் பருவம்
துள்ளிக் குதிக்கும் விடலைப் பருவம்
கனாக் காணும் கல்லூரிப் பருவம்
மீண்டும் திரும்பாத இனிய தருணங்கள்
தாய் சொல்லை தட்டுவதும்
தகப்பன் சொல்லை மிஞ்சுவதும்
மூத்தோர் அறிவுரையை
கேட்காமல் இருப்பதும்
மனதில் பட்டதை செய்ததையும்
பட்டப் பின்னே புத்தி வந்ததையும்
நினைத்திடும் அனுபவ தருணங்கள்
இன்று தகப்பனுக்கே ஆசானாய்
தாய் அவளுக்கு நல்ல மகனாய்
மனைவிக்கு நல்லதொரு கணவனாய்
சமுகத்திற்கு உற்ற சேவகனாய்
ஊதியமில்லா ஊழியனாய்
உணர்வுள்ள மனிதனாய்
மகிழ்வான தருணங்களில்
நெகிழ்வோடு வாழ்கின்றேன்
_ _ _ _-_ _ _ _ _ _ _ _ _ - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment