இரவின் மடியில்
- - - - - - - - - - - - - - - - - -
ஆடிக் காற்றில் அம்மியும் நகர
ஐப்பசி மழையும் விடாமல் தூற
கார்த்திகை தீபத்தில் மழையாய் கொட்டிட
மார்கழி பனியும் சாரலாய் பொழிய
இனிதே நனைந்திடுவோம்
குடையில்லாமல் ஆடிடுவோம்
சித்திரை கோடையில் வாடியதற்கு
மழையிலே வெம்மையை
தணித்துக் கொள்வோம்
தீமைகளை போக்கிக் கொள்வோம்
இனிமையாய் வாழ்ந்திடுவோம்
- - - - - - - - - - - - - - -
அன்புடன்
இல.வீரபாண்டியன்
No comments:
Post a Comment